பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் கோடைக்கால தண்ணீர் பந்தல் திறந்து வைத்தார்.தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அதிமுக ஒன்றிய, நகர கழக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா பாலக்கோடு நகர கழக செயலாளர் ராஜா தலைமையில் நடைபெற்றது.மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கே.வி.ரங்கநாதன் முன்னிலை வகித்தார்.இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் உயர்கல்வி மற்றும் வேளாண்துறை அமைச்சர் கே.பி அன்பழகன் கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். கோடை வெயில் தாக்கத்தில் இருந்து பொது மக்களின் தாகத்தை தணிக்கும் வகையில் தர்பூசணி, இளநீர், நீர்மோர் , வெள்ளரிக்காய், பனை நுங்கு உள்ளிட்ட பொருட்களை பொதுமக்களுக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாரண்டஅள்ளி நகர செயலாளர் கோவிந்தன், கவுன்சிலர் கவிதாசரவணன், கூட்டுறவு சங்க தலைவர்கள் புதுர்சுப்ரமணி, வீரமணி, கவுன்சிலர் விமலன், ஊராட்சி மன்ற தலைவர் கணபதி உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டனர்.
பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் கோடைக்கால தண்ணீர் பந்தல் திறந்து வைத்தார்.
previous post
சந்தூரில் திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
Add Comment