திமுக கிருஷ்ணகிரி நகர கழக செயலாளர் எஸ் கே நவாப் அழைப்புஇந்தியாவின் சட்ட மாமேதை இந்தியாவின் சட்ட சிற்பி அண்ணல் அம்பேத்கரின் 132 வது பிறந்த நாளை முன்னிட்டு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன் அவர்கள் தலைமையில் கிருஷ்ணகிரி நகரக் கழக செயலாளர் எஸ் கே நவாப், தலைமை செயற்குழு உறுப்பினர் நகர மன்ற தலைவர் திருமதி பரிதா நவாப் ஆகியோர்முன்னிலையில் நாளை 14/04/23 காலை 10 மணி அளவில் கிருஷ்ணகிரி பெங்களூர் சாலையில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கரின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. தொடர்ந்து கிருஷ்ணகிரி நகரம் 33வது வார்டுல் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட இருக்கிறது. அது சமயம் மாநில மாவட்ட நகர ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள் இந்நாள் முன்னாள் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிருஷ்ணகிரி நகர மன்ற உறுப்பினர்கள் வட்டக் கழகச் செயலாளர்கள் வட்டக் கழகப் பிரதிநிதிகள் அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாள் நிகழ்ச்சியை சிறப்பித்து தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
அம்பேத்கரின் 132 வது பிறந்த நாள் விழா கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் தே.மதியழகன் எம்எல்ஏ தலைமையில் நாளை நடைபெறுகிறது.எஸ்.கே.நவாப் அழைப்பு.
Add Comment