கிருஷ்ணகிரியில் மாங்கனி முக்கிய பயிராக உள்ளது மாவட்டத்தில் ஆண்டு தோறும் 300,000 டன் மா இங்கு உற்பத்தி ஆகிறது.மேலும் வெளிநாடுகளுக்கும் மாங்கூழ் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.இத்தகைய சிறப்பு வாய்ந்த மாம்பழத்தைப் போற்றும் வகையில் 1992 ஆண்டு முதல் ஆண்டு தோறும் தமிழக அரசால் மாங்கனி கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாகத் தொடர்ந்து 3 ஆண்டுக்காலம் நடத்தப்படாமல் இருந்த கண்காட்சியானது இந்த வருடம் பெறும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை மறுநாள் ஜூன் 22-ஆம் தேதி முதல் 25 நாட்களுக்குக் கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் நடத்தத்திட்டமிடப் பட்டு பணிகள் முழு வீச்சில் நடைப்பெற்று வருகிறது,அரசுத்துறை அரங்குகள் 50 மற்றும் தனியார் அங்காடிகள் 80 மற்றும் கலையரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது மா கண்காட்சி அரங்கு, பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய கேளிக்கை அரங்குகள், சிற்றுண்டி உணவகங்கள், ஆவின் பாலகம், மகளிர் சுய உதவிக்குழு தயாரிப்பு பொருட்கள் விற்பனை அங்காடிகள் போன்றவை அமைக்கும் பணிகளும் விறுவிறுப்பாகவிறுப்பாக நடை பெற்று வருகிறது.இக்கண்காட்சியில் தினமும் மாலை 5 மணி முதல் பள்ளி மாணவர்களின் நடன நிகழ்ச்சி,பாரத நாட்டியம்,பட்டிமன்றம், தெருக் கூத்து,தொலைக்காட்சி மற்றும் சினிமா பிரபலங்களின் பல்சுவை நிகழ்ச்சி,இசைக் கச்சேரி போன்றவை நடைபெறும் மேலும் நாய் கண்காட்சி, கொழு கொழு குழந்தை போட்டி,சாகச நிகழ்ச்சிகள் இடம் பெறும் ஆண்டு தோறும் நடைபெறும் 1 மாத கால மாங்கனி கண்காட்சியைக் காண சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் உள்ளூர் மற்றும் வெளி ஊர்களிலிருந்து இருந்து வருகை புரிவார்கள். பெறும் எதிர்பாப்புடன் நடைபெற விருக்கும் 28வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி ஆரம்பம் ஆக இன்னும் 2 நாட்களே உள்ளது.
Agriculture
கிருஷ்ணகிரியில் “கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம்”- திறப்பு விழா
கிருஷ்ணகிரியில் “கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம்”- திறப்பு விழா
கிருஷ்ணகிரி வட்டாரத்தில் கங்கலேரி, கட்டிநாயனப்பள்ளி, சோக்காடி, கல்லுகுறுக்கி, கட்டிகானப்பள்ளி, அகசிப்பள்ளி, பெத்தனப்பள்ளி, நாரலப்பள்ளி ஆகிய எட்டு பஞ்சாயத்துகளில் இன்றைய தினம் மாண்புமிகு முதல்வர் அவர்களால் காணொலி காட்சி மூலம் கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் திறப்பு விழா ஒளிபரப்பு செய்யப்பட்டது.
காணொலி காட்சியில் முதல்வர் இத்திட்டத்தின் சிறப்பம்சங்களாக அனைத்து கிராமங்களும் தனது ஐந்தாண்டுகால ஆட்சியில் முழுமையாக தன்னிறைவு பெறவேண்டும் அதற்காக அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் என்றும் ஒவ்வொரு நபரும் ஏதேனும் ஒரு திட்டத்திலாவது பயனடைய வேண்டும் என்றார். திட்டத்தின் சிறப்பம்சங்களை விளக்கிய பின் பயனாளிகளுக்கு மானிய விலையில் இடுபொருட்கள் வழங்கப்பட்டது.
கிருஷ்ணகிரி வட்டாரத்தில் 2021-22 ம் ஆண்டிற்கான தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்துகளில் உள்ள விவசாயிகளுக்கு ஒரு பஞ்சாயத்திற்கு 200 பண்ணை குடும்பங்கள் வீதம் தேர்ந்தெடுக்கப்பட்டு, குடும்பம் ஒன்றிற்கு மூன்று தென்னங்கன்றுகள் வீதம் 600 தென்னங்கன்றுகள் இலவசமாக வழங்குவதற்கு பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. மேலும் வரப்பு பயிராக காரமணி பயிரிட 50 சதவிகித மானியத்தில் ஒவ்வொரு பஞ்சாயத்திற்கும் 75 கிலோ விதைகள், கைத்தெளிப்பான் 5 எண்கள், மின்கலத்தெளிப்பான் 4 எண்களும் விநியோகம் செய்யப்பட்டது. வேளாண்மை துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், மானியங்கள், இடுபொருட்கள் குறித்து காட்சிபடுத்தப்பட்டது.
ஒவ்வொரு பஞ்சாயத்திலும் தோட்டக்கலை துறை மூலம் மாடித்தோட்ட கிட் 25 ரூபாய் மானியத்தில் 125 பேருக்கு வழங்கப்பட்டது. பழமரக்கன்றுகள் ஒரு நபருக்கு 8 செடிகள் என்ற விகிதத்தில் 6 நபர்களுக்கு வழங்கப்பட்டது. இவ்விழாவில் கிருஷ்ணகிரி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் திரு.சுரேஷ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் திருமதி.சாந்தி, கிருஷ்ணகிரி வட்டாரத்தில் உள்ள மேற்கண்ட கிராம பஞ்சாயத்துகளின் ஊராட்சித் தலைவர்கள் முக்கிய பிரதிநிகள், வேளாண்மை உழவர் நலத்துறை அலுவலர்கள், தோட்டக்கலை துறை, வேளாண்மை பொறியியல் துறை, வருவாய் துறை அலுவலர்கள் மற்றும் 950 க்கும் மேற்பட்ட விவசாய பெருமக்கள் திரளாக கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். மேலும் விவரங்களுக்கும் மேற்கண்ட திட்டங்களில் பயனடைவதற்கும் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவர்களை மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர்களை அணுகி பயன்பெறுமாறு கிருஷ்ணகிரி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் திரு.வி.சுரேஷ்குமார் தெரிவித்தார்.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே தொடர் மழை பொழிவால் கெசர்குளி அணை 18 அடியாக உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி
பாலக்கோடு அருகே தொடர் மழை பொழிவால் கெசர்குளி அணை 18அடியாக உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கெசர்குளிஅணையின் மொத்த நீர்மட்டம் 25 அடி உயரம் கொண்ட அணையில் தற்போது 18 அடி உயரத்திற்கு நீர் உள்ளது. அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 100 கன அடியாக உள்ளது, அணைக்கு நீர் வரத்து பெட்டமுகிலாளம் காப்பூகாடு, கோட்டூர்மலை காப்பூகாடு, மொரப்பூர் காப்பூகாடு பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பொழிவின் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.மேலும்
பெல்ரம்பட்டி, கரகூர், சீரியம்பட்டி, கோட்டூர், ஈச்சம்பள்ளம், காடியம்பட்டி, பாலக்கோடு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 4500 ஏக்கர் விளை நிலம் பாசன வசதி பெறுகிறது. அணையில் நீர் இருப்பு 12 அடியாக இருந்த நிலையில் விரைவாக அணை நிரம்பி வருவதால் இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஆலங்கட்டி மழை காரணமாக முள்ளங்கி விலையேற்றம் – கிலோ ரூ.4க்கு விற்று வந்த முள்ளங்கி தற்போது ரூ.12க்கு விற்கப்படுவதால் போச்சம்பள்ளி விவசாயிகள் இரட்டிப்பு மகிழ்ச்சி
ஆலங்கட்டி மழை காரணமாக முள்ளங்கி விலையேற்றம் – கிலோ ரூ.4க்கு விற்று வந்த முள்ளங்கி தற்போது ரூ.12க்கு விற்கப்படுவதால் விவசாயிகள் இரட்டிப்பு மகிழ்ச்சி
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதிகளான திருவயலூர், ஜம்புகுட்டப்பட்டி, எ.மோட்டூர், ஜிங்கல்கதிரம்பட்டி, பனங்காட்டூர், கீழ்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் முள்ளங்கி பயிரிட்டுள்ளனர். தற்போது அறுவடை செய்து வரும் விவசாயிகள் முள்ளங்ளி கிலோ ஒன்றுக்கு ரூ.12க்கு எடுக்கப்படுவதால் மகிழ்ச்சியில் உள்ளனர்.
தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கடந்த இரு வாரங்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. சில இடங்களில் கனமழையும், ஆலங்கட்டி மழையும் பெய்து வருகிறது. காரிமங்கலம், போச்சம்பள்ளி சிப்காட் ஆகிய பகுதிகளில் அதிக அளவு கன மழையுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் அந்த பகுதிகளில் விளைந்த முள்ளங்கி விலை நிலங்களிலேயே அழுகத்துவங்கின. இந்த முள்ளங்கி ஏற்றுமதிக்கு உகந்ததாக இல்லை என்பதால் வரத்து குறையத்துவங்கியது. போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதிகளான திருவயலூர், ஜம்புகுட்டப்பட்டி, எ.மோட்டூர், ஜிங்கல்கதிரம்பட்டி, பனங்காட்டூர், கீழ்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை காரணமாக முள்ளங்கி நல்ல விளைச்சல் கண்டுள்ளது. இதனால் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கிலோ ஒன்றுக்கு ரூ.4க்கு விற்ற நிலையில் தற்போது கிலோ ரூ.12க்கு விற்கப்படுவதால் விவசாயிகள் பெரு மகிழ்ச்சியடைந்துள்ளனர். சுற்று வட்டார பகுதிகளில் ஆலங்கட்டி மழை காரணமாக முள்ளங்கி விளைச்சல் பாதிப்பு ஏற்பட்டதால் விலையேற்றம் கண்டுள்ளதாக காரிமங்கலத்தை சேர்ந்த மொத்த வியாபாரி ராஜா தெரிவித்தார்.
ஆலங்கட்டி மழை காரணமாக முள்ளங்கி விலையேற்றம் – கிலோ ரூ.4க்கு விற்று வந்த முள்ளங்கி தற்போது ரூ.12க்கு விற்கப்படுவதால் போச்சம்பள்ளி விவசாயிகள் இரட்டிப்பு மகிழ்ச்சி
ஆலங்கட்டி மழை காரணமாக முள்ளங்கி விலையேற்றம் – கிலோ ரூ.4க்கு விற்று வந்த முள்ளங்கி தற்போது ரூ.12க்கு விற்கப்படுவதால் விவசாயிகள் இரட்டிப்பு மகிழ்ச்சி
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதிகளான திருவயலூர், ஜம்புகுட்டப்பட்டி, எ.மோட்டூர், ஜிங்கல்கதிரம்பட்டி, பனங்காட்டூர், கீழ்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் முள்ளங்கி பயிரிட்டுள்ளனர். தற்போது அறுவடை செய்து வரும் விவசாயிகள் முள்ளங்ளி கிலோ ஒன்றுக்கு ரூ.12க்கு எடுக்கப்படுவதால் மகிழ்ச்சியில் உள்ளனர்.
தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கடந்த இரு வாரங்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. சில இடங்களில் கனமழையும், ஆலங்கட்டி மழையும் பெய்து வருகிறது. காரிமங்கலம், போச்சம்பள்ளி சிப்காட் ஆகிய பகுதிகளில் அதிக அளவு கன மழையுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் அந்த பகுதிகளில் விளைந்த முள்ளங்கி விலை நிலங்களிலேயே அழுகத்துவங்கின. இந்த முள்ளங்கி ஏற்றுமதிக்கு உகந்ததாக இல்லை என்பதால் வரத்து குறையத்துவங்கியது. போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதிகளான திருவயலூர், ஜம்புகுட்டப்பட்டி, எ.மோட்டூர், ஜிங்கல்கதிரம்பட்டி, பனங்காட்டூர், கீழ்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை காரணமாக முள்ளங்கி நல்ல விளைச்சல் கண்டுள்ளது. இதனால் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கிலோ ஒன்றுக்கு ரூ.4க்கு விற்ற நிலையில் தற்போது கிலோ ரூ.12க்கு விற்கப்படுவதால் விவசாயிகள் பெரு மகிழ்ச்சியடைந்துள்ளனர். சுற்று வட்டார பகுதிகளில் ஆலங்கட்டி மழை காரணமாக முள்ளங்கி விளைச்சல் பாதிப்பு ஏற்பட்டதால் விலையேற்றம் கண்டுள்ளதாக காரிமங்கலத்தை சேர்ந்த மொத்த வியாபாரி ராஜா தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி கட்டிகானப்பள்ளி பி.ஆர்.சி பள்ளி மைதானத்தில் ஞாயிறு தோறும் மரபு சந்தை
தமிழகமெங்கும் மரபு சந்தைகள் துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இயற்கை விவசாய முறையில் விளைவிக்கப்படும் பொருட்களை விவசாயிகளே நேரிடையாக விற்பனை செய்கின்றனர். பல்வேறு அரிசி வகைகள், தானிய வகைகள், பழங்கள், காய்கறிகள், கீரை வகைகள், நாட்டுக்கோழி, முட்டைகள், மூலிகை பொருட்கள், மர செக்கு எண்னைகள், என பலதரப்பட்ட பொருட்கள் கிடைக்கும் இந்த மரபு சந்தை இப்பொழுது கிருஷ்ணகிரியில் ஆரம்பித்துள்ளார்கள். கிருஷ்ணகிரி ராயகோட்டை ரோடு புதிய வீட்டு வசதி வாரியம் முதல் பகுதியில் உள்ள பி.ஆர்.சி.பள்ளி அருகே உள்ள மைதானத்தில் நடைபெறுகிறது. விவசாயிகளுக்கு ஆதரவு கொடுத்து ஆரோக்கிய உணவு பொருட்களை வாங்கி பயனடையுங்கள்
தேன்கனிக்கோட்டையில் இன்று பேட்டராய சுவாமி கோவில் தேர் திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
தேன்கனிக்கோட்டையில் இன்று பேட்டராய சுவாமி கோவில் தேர் திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சௌந்தரவல்லி சமேத ஸ்ரீ பேட்டராய் சுவாமி கோயில் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவிலுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பக்தர்கள் ஏராளமான வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர் .இக்கோயிலின் கருவறையில் மூலவரான பேட்டராய ஸ்வாமி நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார் தனி சன்னதியில் ஸ்ரீ சௌந்தரவல்லி தாயார் பக்தர்களுக்கு காட்சி தருகிறார் பழமையும் சிறப்புமிக்க இந்தக் கோயிலின் தேர் திருவிழா ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம் அதேபோல் இந்த ஆண்டு தேர் திருவிழா நிகழ்ச்சிகள் கல்யாண உற்சவத்துடன் துவங்கி கடந்த 2ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது தொடர்ந்து ஊஞ்சல் உற்சவம், அம்சவாசன உற்சவம் நடைபெற்றது நேற்று இரவு செவ்வாய்க்கிழமை 9 மணிக்கு கஜேந்திர மோக்ஷம் என்ற ராமபாணம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று 13/04/2022 காலை நடைபெற்றது முதலில் சௌந்தரவல்லி தாயார் தேரை இழுத்துச் செல்லப்பட்டது தொடர்ந்து ஸ்ரீதேவி பூதேவி பேட்டராய சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அலங்கரிக்கப்பட்ட ஐந்து அடுக்கு தேரில் வைத்து சுவாமிக்கு பூஜைகள் செய்யப்பட்டது
இதை தொடர்ந்து தளி ஒன்றிய குழு தலைவர் சீனிவாசலு ரெட்டி, தேன்கனிகோட்டை பேருராட்சி தலைவர் சீனிவாசன் பேரூராட்சி செயல்அலுவலர் மஞ்சுநாத் ஹிந்து அறநிலைதுறை இணை ஆணையாளர் பாஸ்கர் ஆகியோர் வடம்பிடித்து தேரோட்டதை தொடங்கிவைத்தனர் பக்தர்கள் வடம் பிடித்து தேரைஇழுத்துச் சென்றனர் அப்போது பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என பக்தி கோஷத்துடன் கோஷங்களை முழங்கினார்கள் விழாவை முன்னிட்டு பக்தர்கள் தங்கள் மனதில் நினைத்தது நிறைவேற வேண்டி வாழைப்பழத்தில் தவணை இலை அருகம்புல் சுற்றி தேரின் மீது எரிந்தனர் மேலும் தங்களின் விளை நிலங்களில் தானியங்கள் நன்கு விளையும் வேண்டும் என வேண்டிக் கொண்டு தேரின் மீது நவதானியங்களை இருந்து தங்களின் நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்
நகரமெங்கும் அன்னதானம், நீர்மோர், பானகம், பாசிப்பருப்பு ஆகியவற்றை திருவிழாவிற்கு வந்த பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. இத்திருவிழாவில் தேன்கனிக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்தும் கர்நாடக ஆந்திர மாநில இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்
பாலக்கோடு அருகே மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் 5 ஏக்கர் கரும்பு தோட்டம் எரிந்து நாசம்.
பாலக்கோடு அருகே குத்தலஅள்ளி கிராமத்தில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் 5 ஏக்கர் கரும்பு தோட்டம் எரிந்து நாசம்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த குத்தல அள்ளி பகுதியை சேர்ந்த விவசாயி நீலமேகம் என்பவர் தனக்கு சொந்தமான 1 ஏக்கர் நிலத்தில் கரும்பு விவசாயம் செய்து வருகிறார். கரும்பு தோட்டம் அறுவடைக்கு தயராக இருந்த நிலையில் கரும்பு தோட்டத்தில் மின் கம்பி தாழ்வாக இருந்தது, பலத்த காற்று வீசியதால் மின்கம்பி உராய்வு ஏற்பட்டு மின் பொறி கரும்பின் மீது விழுந்ததால் கரும்புத் தோட்டம்
திடீரென தீ பிடித்தது, உடனடியாக பாலக்கோடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர், ஆனால் தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள், தீ மளமளவென பரவி அருகில் இருந்த, மகேந்திரன், சகாதேவன் ஆகியோரது கரும்பு தோட்டத்திற்கு தீ பரவி எரிய ஆரம்பித்தது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இருப்பினும் நீலமேகம், மகேந்திரன், சகாதேவன் ஆகியோரது 5 ஏக்கர் கரும்பு தோட்டம் முற்றிலும் எரிந்து சேதமானது. இந்த தீ விபத்து குறித்து பாலக்கோடு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.