ஊத்தங்கரை, ஆக.25: கூலித்தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து சிங்காரப்பேட்டை போலீஸôர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் ஊத்தங்கரை அடுத்த மிட்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பன்(60). கூலித்தொழிலாளி. இவர் பெரியதள்ளப்பாடி கிராமத்தில் வெங்கட்ராமன் என்பவர், செங்கல் சூளையில் தங்கி வேலை செய்து வந்தார். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை பெரியதள்ளப்பாடியில் இருந்து திருப்பத்தூர் செல்லும் சாலை அருகே உள்ள புளியந்தோப்பில், மாரியப்பன் மர்மமான முறையில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து சிங்காரப்பேட்டை போலீஸôர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மாரியப்பனை செங்கல் சூளையில் உடன் பணிபுரிந்த ஆனந்தூர் கொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்த முருகன்(85). இவருக்கும் மாரியப்பனுக்கும் குடிபோதையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் முருகன் கட்டையால் மாரியப்பனை தாக்கியுள்ளார். குடிபோதையில் இருந்த மாரியப்பன் மயங்கி விழுந்து இறந்துள்ளார்.
இறந்தவரின் உடலைபெரியதள்ளப்பாடி பகுதியை சேர்ந்த வெங்கட்ராமன் (51). அவரது மகன் அஜித் (21). அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த சேகர் (50). ஆகியோர் உடலை கொண்டு சென்று புளியந்தோப்பு பகுதியில் வீசிவிட்டு சென்றுள்ளனர். கொலை செய்ததாக 4 பேரை சிங்காரப்பேட்டை போலீஸôர் புதன்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனர்.