கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஒன்றியம் பாத்துகேட்டா கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றில் வரும் நீரில் விஷக் கழிவுகள் கலந்து நுரையோடு வருகிறது. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க மக்கள் வேண்டுகோள். மழைக்காலங்களில் இது போன்ற நிலைகள் அடிக்கடி ஏற்படுவதால் மாடு வளர்ப்பு மற்றும் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர் இந்த கழிவுகள் விடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Poovizhi R
உலக பட்டினி தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வுக்காக இன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முக்கிய பகுதிகளில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மதிய உணவு வழங்கப்படுகிறது
உலகம் முழுவதும் மே 28-ஆம் தேதி இன்று உலக பட்டினி தினம் அனுசரிக்கப்படுகிறது. பட்டினியால் வாடும் மக்களை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்த தினம் ஆண்டு தோறும் அனுசரிக்கப்படுகிறது.ஆகையால் தளபதி அவர்களின் சொல்லுக்கினங்க, உலக பட்டினி தினத்தினை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்ட தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக தளபதி விஜய் ஒரு நாள் மதிய உணவு சேவையகம் திட்டம் 28.05.2023 (ஞாயிற்றுக்கிழமை) இன்று பகல் 11 மணியளவில் நடைப்பெறும்.அதே சமயம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநகரம், நகரம், ஒன்றியம், சார்பு அணி மற்றும் பகுதிகளில் சார்பில் தாங்கள் உள்ள இடங்களில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ஒருவேளை மதியம் உணவு வழங்க வேண்டும் என்று தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒருவேளை (மதியம்) உணவு வழங்கும் இடங்கள்:-1). ஓசூர்.2). கிருஷ்ணகிரி3). காவேரிப்பட்டணம்4). பர்கூர்5). ஊத்தங்கரை6). தளி7).தேன்கனிக்கோட்டை8). கெலமங்கலம்9).வேப்பனஹள்ளி10). சூளகிரி ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது என்று கிருஷ்ணகிரி மாவட்ட தலைமை தளபதி மக்கள் இயக்க மாவட்ட செயலாளர் சுரேஷ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்
பாலக்கோட்டில் பேருந்து நிலைய சீரமைப் பணிகளால் போக்குவரத்து நெரிசல்.தினறும் காவல்துறை.
பாலக்கோட்டில் பேருந்து நிலைய சீரமைப் பணிகளால் போக்குவரத்து நெரிசல். தினறும் காவல்துறை தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேருந்து நிலையத்தில் இருந்து தனியார் மற்றும் அரசு பேருந்துகள் என 200க்கும் மேற்பட்ட பேருந்துகளும் மற்றும் 200க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் என எப்போதும் பரபரப்பாக பேருந்து நிலையத்தில் இருந்து வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது புறநகர் பேருந்து நிலைய சீரமைப்பு பணிகள் நடைப்பெற்று வருவதால், பேருந்துகள் அனைத்தும் நகர பேருந்து நிலையத்தில் நின்று செல்கின்றன. மேலும் ஓசூர், மாரண்டஹள்ளி, அஞ்செட்டி, பெங்களூர், சென்னை மற்றும் தருமபுரி, சேலம், கோவை, பழனி, உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் பேருந்துகள் நகர நெடுஞ்சாலையில் இருபுறமும் ஒன்றின் பின் ஒன்றாக நிறுத்தப்படுவதாலும் பேருந்து நிலையம் முன்பு சாலையோர நடைபாதை கடைகள்,வணிக கடைகள் முன்பு பந்தல் அமைத்தும், சாலையை ஆக்கிரமித்து இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதால் சாலையில் செல்லும் வாகனங்கள் ஊர்ந்து செல்ல வேண்டிய சூழல் ஏற்படுகின்றது. மேலும் பள்ளிகள் திறக்க இன்னும் சில நாட்கள் இருக்கும் நிலையில் பள்ளி வாகனங்கள் உள்ளிட்டவை வரும்போது மேலும் கூட்ட நெரிச்சல் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறை தினறி வருகிறது.எனவே மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை மேற்கொண்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற போக்குவரத்து நெரிசலை ஒழுங்குப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாலக்கோடு தாலுகா ஆபிசில் நடைபெற்ற ஜமாபந்தி 285 மனுக்கள் பெறப்பட்டு,அதில் 70 பயனாளிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
பாலக்கோடு தாலுகா ஆபிசில் நடைப்பெற்ற ஜமாபந்தி 285 மனுக்கள் பெறப்பட்டு, அதில் 70 பயனாளிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வருவாய் கோட்டத்திற்க்கு உட்பட்ட புலிகரை, பாலக்கோடு, மாரண்டஅள்ளி, வெள்ளிசந்தை ஆகிய பிர்காவிற்க்கு உட்பட்ட 42 வருவாய் கிராமங்களுகான ஜமாபந்தி நிகழ்ச்சி 4 நாட்களாக நடைப்பெற்று வந்தன,இதில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் நஜ்ரி இக்பால் தலைமை வகித்து பொது மக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கை தொடர்பான மனுக்களை பெற்றுக் கொண்டார்.இதில் 285 மனுக்கள் பெறப்பட்டு 70 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.நில உரிமை சம்மந்தமான 2 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.மீதமுள்ள மனுக்கள் பரிசீலனையில் உள்ளது.கடைசி நாளான இன்று தாலுக்கா அலுவலக கூட்ட அரங்கில் தாசில்தார் ராஜா தலைமையில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில், சப் கலெக்டர் நஜீரிஇக்பால் கலந்துகொண்டு 70 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல், பட்டா திருத்தம், இலவசவீட்டுமனைபட்டா ஆகியவற்றை வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில் ஓ.ஏ.பி. தாசில்தார் ரேவதி, வட்ட வழங்கல்அலுவலர்பழனி, துணை தாசில்தார்கள் சிவக்குமார், சத்யபிரியா, வருவாய் ஆய்வாளர்கள் ரவி, வி.ஏ.ஓக்கள் சாம்ராஜ், மாதப்பன், மாதேஷ், சத்யா, முருகேசன், குமரன், வருவாய் துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர். அவர்
கோவிட்-19 பரவலால் வேலையிழந்து நாடு திரும்பியவருக்கு 25% மானியத்துடன்தொழில் தொடங்க கடனுதவி வழங்கப்படுகிறது.
கோவிட்-19 பரவலால் வேலையிழந்து நாடு திரும்பியவருக்கு 25% மானியத்துடன்தொழில் தொடங்க கடனுதவி வழங்கப்படுகிறது.மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப, அவர்கள் தகவல் .இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப அவர்கள் தெரிவித்துள்ளதாவது.கோவிட்-19 பெருந்தொற்று பரவலால் வெளிநாட்டில் வேலையிழந்து நாடு திரும்பிய புலம்பெயர் தமிழர்களுக்கு வாழ்வாதாரத்திற்கான வாய்ப்புகளை வழங்கும் நோக்கத்துடன் தமிழ்நாடு அரசு “புலம்பெயர்ந்தோர் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்” (MEGP) என்ற திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது.இத்திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் குறைந்தது 2 ஆண்டுகள் பணிபுரிந்து கோவிட்-19 பெருந்தொற்று பரவலால் வேலையிழந்து நாடு திரும்பிய தமிழர்கள் சுயதொழில் தொடங்க மானியத்துடன் இணைந்த கடனுதவி பெற்று பயன்பெறலாம். அவர்கள் கோவிட்-19 பெருந்தொற்று பரவலினால் 01.01.2020 அன்று அல்லது அதற்கு பிந்தைய நாட்களில் தமிழ்நாடு திரும்பி இருக்க வேண்டும். குறைந்தது 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது 18 க்கு மேலாகவும் 55 க்கு மிகாமலும் இருக்க வேண்டும். வியாபார மற்றும் சேவை தொழில் திட்டங்களுக்கு அதிகபட்ச திட்ட மதிப்பீடு ரூ.5.00 இலட்சம் ஆகவும் உற்பத்தி தொழில் திட்டங்களுக்கு ரூ.15.00 இலட்சம் திட்ட மதிப்பீடாக இருக்க வேண்டும். பயனாளர் தம் பங்காக பொது பிரிவு பயனாளர்கள் எனில் திட்ட தொகையில் 10% மற்றும் பெண்கள். இடஒதுக்கீட்டு பிரிவினர் உள்ளட்ட சிறப்பு பிரிவினர் எனில் 5% செலுத்த வேண்டும். மீதமுள்ள தொகை வங்கிக் கடனாக வழங்கப்படும்.அரசு, திட்டத் தொகையில் 25% அதிகபட்சம் ரூ.2.5 இலட்சம் என வழங்கும் மானியம் 3 ஆண்டுகளுக்கு வைப்பு நிதியாக வைக்கப்பட்டு பின்னர் கடனுக்கு சரிகட்டப்படும். கடன் வழங்கப்பட்ட 6 மாதங்கள் கழித்து 5 ஆண்டுகளுக்குள் திரும்ப செலுத்தப்பட வேண்டும்.இத்திட்டம், மாவட்ட தொழில் மையம் வாயிலாக செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற www.msmoonline.tn.gov.in/meqpஎன்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில் விண்ணப்பத்தினை இரு நகல்களாக சமர்பிக்க வேண்டும்.எனவே, இந்த வாய்ப்பினை வெளிநாடுகளிலிருந்து கோவிட்-19 பெருந்தொற்று பரவலால் வேலையிழந்து நாடு திரும்பிய தருமபுரிமாவட்டத்தைச் சேர்ந்த தகுதியும், தொழில் துவங்க ஆர்வமும் கொண்டோர் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், SIDCO தொழிற்பேட்டை ஓட்டப்பட்டி, தருமபுரி அலுவலகத்தை நேரடியாகவோ அல்லது 8925533940, 8925533941 மற்றும் 8925533942 ஆகியஎண்களுக்கு தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப, அவர்கள் தெரிவித்துள்ளார்.
தாட்கோ மூலம் எச்.சி.எல் நிறுவனத்தில் வேலை வாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பிற்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.தருமபுரிமாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்
தாட்கோ மூலம் எச்.சி.எல் நிறுவனத்தில் வேலை வாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பிற்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப, அவர்கள் தகவல்இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப. அவர்கள் தெரிவித்துள்ளதாவது.தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் வீட்டுவசதி மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ)நிறுவனமானது HCL நிறுவனத்தில் 12-ஆம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர்மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவர்களுக்கு HCL Technologies-ல்வேலைவாய்ப்புடன் இராஜஸ்தான் மாநிலத்திலுள்ள புகழ்வாய்ந்த பிட்ஸ்பிலானிகல்லூரியில் B.Sc (Computing Desigining) பட்டப்படிப்பு, தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ளசாஸ்தரா பல்கலைகழகத்தில் BCA பட்டப்படிப்பு, அமிட்டி பல்கலைகழகத்தில்BCA/BBA/B.Com மற்றும் நாக்பூரிலுள்ள ஐஐஎம் பல்கலைகழகத்தில் IntegratedManagerment பட்டப்படிப்பு சேர்ந்து படித்திடவும், வாய்ப்பும் பெற்று தரப்படும்.இதற்கான தகுதிகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும். பன்னிரெண்டாம் வகுப்பில் 2022 ஆம் ஆண்டுகளில் முடித்தவர்கள் 60 சதவீதம் மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் முடித்தவர்கள் 75 சதவீதம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.3.00 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். எச்.சி.எல் மூலம் நடத்தப்படும் Entrance Examination தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி தாட்கோ மூலம் வழங்கப்படும் இப்படிப்பிற்கான செலவீனம் தாட்கோவால் ஏற்கப்படும்.இத்திட்டத்தில் வருடாந்திர ஊதியமாக ரூ.1.70,000/- முதல் ரூ.2.20.000/- வரை பெறலாம். மேலும் திறமைக்கேற்றவாறு பதவி உயர்வின் அடிப்படையில் ஊதிய உயர்வும் பெறலாம். மேற்கண்ட திட்த்தில் சேர தாட்கோ இணையதளம் www.tahdco.com என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகம். எண்-3, சாலை விநாயகர் கோவில் ரோடு, விருப்பாட்சிப்புரம், தருமபுரி என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
தருமபுரி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் நடைபெற்றது.
தருமபுரி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கி.சாந்தி இஆப., அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் இன்று (26.05.2023) நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையேற்று. பேசும்போது தெரிவித்ததாவது:-மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விவசாயிகளின்பொருளாதார மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து அதனைச் சிறப்பாகச் செயல்படுத்தி வருகின்றார்கள். வேளாண் உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுத்து அரசு அறிவித்து செயல்படுத்தி வருகின்ற அனைத்துத் திட்டங்களையும் வேளாண் பெருமக்களுக்கு முழுமையாக கொண்டு சேர்த்திட மாவட்ட நிர்வாகத்தால் பல்வேறு நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.தருமபுரி மாவட்டத்தில் ஜனவரி முதல் மே-2023 திங்கள் வரையிலான காலத்திற்கான இயல்பான மழையளவு 156.9மி.மீ ஆகும். தற்பொழுது வரை இந்த ஆண்டு 168.43 மி.மீ மழை பெய்துள்ளது. தருமபுரி மாவட்டத்தில் வேளாண்மை உழவர் நலத் துறையில் 2023-2024 ஆம் ஆண்டிற்கு 1.72,270 ஹெக்டேர் பரப்பளவில் நெல், சிறுதானியங்கள், பயிறு வகைகள் உள்ளிட்ட உணவு தானிய பயிர்கள் மற்றும் எண்ணெய் வித்துக்கள், பருத்தி, கரும்பு சாகுபடி பரப்பாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.வேளாண் பயிர்களின் உற்பத்தியை பெருக்கும் பொருட்டு இந்த 2023- 2024 ஆம் ஆண்டிற்கு 947.2 மெட்ரிக் டன் நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் பருத்தி சான்று விதைகள் உள்ளிட்டவை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மே-2023 திங்கள் வரை 21.40 மெட்ரிக் டன் நெல், சிறுதானியங்கள். பயறு வகைகள் எண்ணெய் வித்துக்கள், மற்றும் பருத்தி சான்று விதைகள் உள்ளிட்டவை விநியோகம் செய்யப்பட்டுள்ளது. நெல், சிறுதானியங்கள். பயறு வகைகள். எண்ணெய் வித்துக்கள், மற்றும் பருத்தி உள்ளிட்ட விதைகள் அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தேவையான விதைகளை பெற்று பயன்படுத்திக் கொள்ளலாம்.தருமபுரி மாவட்டத்திற்கு வருடாந்திர உரத்தேவை 62484 மெட்ரிக் டன் என கணக்கிடப்பட்டுள்ளது. 14,461 மெட்ரிக் டன் யூரியா, டிஏபி, பொட்டாஷ். காம்ப்ளக்ஸ், எஸ்.எஸ்.பி உள்ளிட்ட உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. மேலும் இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் பொருட்டு அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, ரைசோபியம் போன்ற உயிர் உரங்கள் 2023-2024 ஆம் ஆண்டிற்கு 30.000 எண்ணிக்கைகள் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், GLD-2023 திங்கள் வரை 713 எண்ணிக்கையிலான உயிர் உரங்கள் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு உள்ளன. 22,450 எண்ணிக்கையிலான உயிர் உரங்கள் இருப்பில் உள்ளன. உயிர் உரங்கள் தேவையான அளவு இருப்பு உள்ளன. விவசாயிகள் தங்களுக்கு தேவையானவற்றை பெற்று பயன்படுத்திக்கொள்ளலாம்.தருமபுரி மாவட்டத்தில் கடந்த ஏப்ரல்-2023 திங்களில் நெல், எண்ணெய் வித்துக்கள், கரும்பு, மரவள்ளி, மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு வகையான பயிர்கள் பயிரிட்ட 2240 விவசாயிகளுக்கு ரூ.18.49 கோடி பயிர்கடன் உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.இன்றைய தினம் தருமபுரி மாவட்ட பல்வேறு துறை அலுவலர்களுடன் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், இக்கூட்டத்தில் விவசாய மின்இணைப்பு, ஆவின் பாலுக்கான பணப்பட்டுவாடா. பட்டா மாறுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும், வேளாண்மைத் துறை சார்ந்த அனைத்து திட்டங்களையும்விவசாயிகளுக்கு சரிவர எடுத்துச் சென்று அவர்களின் உற்பத்தியையும்,வருமானத்தையும் அதிகரிக்கும் வகையில் வேளாண்மைத் துறையின் அனைத்துநிலை அலுவலர்களும் விவசாயிகளுக்கு வேளாண் சார்ந்த அனைத்து நலத்திட்டஉதவிகளும் கிடைக்கப்பெறுவதை அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும் எனஅறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்திஇஆப, அவர்கள் தெரிவித்தார்கள்.இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர்/ அரூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநர் திருமதி.பிரியா, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திரு.சு.இராமதாஸ், வேளாண்மை இணை இயக்குநர் திருமதி.க.விஜயா. கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் மரு.சாமிநாதன், வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் திரு.மாது. தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை துணை இயக்குநர் திருமதி.கே.மாலினி உட்பட தொடர்புடைய அலுவலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
காவேரிப்பட்டணம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் துய்மை பாரதம் இயக்கம்திடக்கழிவு மேலன்மை திட்டத்தின் கீழ் மின்கல முன்று சக்கர வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.கே.அசோக்குமார் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்
காவேரிப்பட்டணம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் துய்மை பாரதம் இயக்கம்திடக்கழிவு மேலன்மை திட்டத்தின் கீழ் மின்சார மூலம் இயங்கும் குப்பைகளை சேகரிக்கும் முன்று சக்கர வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி காவேரிப்பட்டணம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில்காவேரிப்பட்டணம் மேற்கு ஒன்றிய செயலாளரும் ஒன்றிய குழு தலைவருமான பையூர் P.ரவி அவர்கள் தலைமையிலும்காவேரிப்பட்டணம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முன்னிலையிலும் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும் கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினருமான K.அசோக்குமார் அவர்கள் காவேரிப்பட்டணம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளுக்கு மின்சார முலம் இயங்கும் குப்பைகளை சேகரிக்கும் மூன்று சக்கர வாகனங்கள் வழங்கப்பட்டதுஇந்நிகழ்ச்சியில் ஒன்றிய குழு உறுப்பினர்களும் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்களும் மாவட்ட ஆவின் பால் உற்பத்தி தலைவர் பி.கே.குப்புசாமி,காவேரிப்பட்டணம் பேரூராட்சி கழக செயலாளர் எம்.விமல், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சங்கிதாகேசவன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் ஜெ.ஜெயக்குமார்,மாவட்ட மாணவரணி செயலாளர் கே.பி.மோகன், ஒன்றிய குழு உறுப்பினர்சவிதாவிக்ரம்குமார்,ஒன்றிய குழு உறுப்பினர் அம்பிகாசரவணன்,ஒன்றிய குழு உறுப்பினர்எஸ்.கணேசன், மலையாண்டஹள்ளி ஊராட்சி மன்ற தலைவர் சரசுகோவிந்தசாமி, நகர அம்மா பேரவை செயலாளர்கார்த்திக்,திம்மாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் துரைசாமி, ஜெகதாப் ஊராட்சி மன்ற தலைவர் கன்னியம்மாள் ராமுர்த்தி ஒன்றிய அவைத் தலைவர் சுந்தர்,சாப்பரம் ஊராட்சி மன்ற தலைவர் முருகன், குடிமேனஹள்ளி ஊராட்சி மன்ற தலைவர் முருகையன், முன்னாள் கவுன்சிலர் ராஜா, ஒன்றிய துணை செயலாளர்தனலட்சுமிமுனிராஜ்,நகர தகவல் தொழில்நுட்பு பிரிவு செயலாளர் ஆர்.பாலாஜி,ஊராட்சி தகவல் தொழில்நுட்பு பிரிவு செயலாளர் ரங்கநாதன், விக்னேஷ், கராத்தே மாஸ்டர் ஷிகான் மாரியப்பன்மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
ஓசூர் முனீஸ்வர் நகர் பகுதி சாலையோர கடைகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் முயற்சி! பாஜக மாவட்ட தலைவர் எம்.நாகராஜ் மாநகராட்சி அதிகாரிகளிடம் பேசி சமரசம் ஏற்படுத்தினார்
ஓசூர் முனீஸ்வர் நகர் பகுதியில் உள்ள சாலையோர கடைகளை மாநகராட்சி நிர்வாகம் எந்தஒரு முன் அறிவிப்பும் இல்லாமல் அகற்ற வியாபாரிகளை வற்புறுத்தியதை தொடர்ந்து கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாஜக தலைவர் எம்.நாகராஜ் தலைமையில் பாஜகவினர் வியாபாரிகளுடன் இணைந்து போராட்டம் நடத்தி மாநகராட்சி நிர்வாகத்தின் செயலை கண்டித்து கண்டனம் தெரிவித்தனர். அதன் பின் சாலையோர வியாபாரிகளுடன் மாநகராட்சி அலுவலகம் சென்று அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வியாபாரிகளுக்கு சாதகமாக மாநகராட்சி நிர்வாகம் செயல்பட உறுதியளிக்க செய்யப்பட்டது. உடன் பாஜக நிர்வாகிகள் ஸ்ரீனிவாசன் முருகன் ராஜசேகர் மஞ்சுநாத் பிரவீன்குமார் கிஷோர் நகர தலைவர்கள் ரமேஷ் கண்ணன் மணிகண்டன் நாகேந்திரன் உட்பட பலர் இருந்தனர் …
தர்மபுரியில் ஈசாப் வங்கி துவக்கம் வங்கியை தர்மபுரி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செந்தில் அவர்கள் துவக்கி வைத்தார்
தர்மபுரியில் ஈசாப் வங்கி துவக்கம் வங்கியை தர்மபுரி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செந்தில் அவர்கள் துவக்கி வைத்தார் தர்மபுரி பச்சமுத்து மேல்நிலைப் பள்ளி அருகில் கேரள மாநிலம், திருச்சூரை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஈசாப் வங்கியின் புதிய கிளையை 26.05.2023 வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில் தர்மபுரி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் தங்கம் மருத்துவமனை தலைவர் திரு. டாக்டர் செந்தில் அவர்கள் துவக்கி வைத்து சிறப்புரை வழங்கினார் அப்பொழுது அவர் பேசுகையில் தர்மபுரி பஸ் நிலையத்தில் உள்ள சிறிய வணிகரிடம் ஒரு நாட்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்து 100 ரூபாய் வட்டி வாங்குகின்ற சூழ்நிலை தற்பொழுது நிலவி வருகிறது இதனால் கோடி கணக்கில் வட்டியாக கட்டுகின்ற சூழல் சிறு வணிகர்களுக்கு ஏற்படுகிறது மற்றும் தர்மபுரி மாவட்டம் கந்துவட்டியால் பின்னுக்கு தள்ளப்பட்டது இந்த சூழ்நிலை மாற வேண்டும் என்றால் இது போன்ற வங்கிகள் மூலமாகவும் தொண்டு நிறுவனங்கள் மூலமாகவும் தர்மபுரி மாவட்டம் வளர்ந்த மாவட்டமாக மாற வேண்டும் என்றும் தெரிவித்தார் முன்னதாக. மருத்துவர் செந்தில், மலரும் உள்ளாட்சித் தலைவர் திரு முருகேசன், கிரஸ்ட் இந்தியா இயக்குனர் தேவகி, இந்தியன் பில்லர்ஸ் வினோத், ஆகியோர் குத்து விளக்கேற்றி சிறப்பித்தனர். இந்நிகழ்வில் ஈசாப் வங்கியின் தமிழ்நாடு தலைவர் திரு அருண் அவர்கள் பேசும்போது இந்தியா முழுவதும் 27 மாநிலங்களில் 700 க்கும் மேற்பட்ட கிளைகளை துவக்கி அடித்தட்டு மக்களுக்கு உதவி செய்வதற்காகவும்,விவசாய பெருங்குடி மக்களின் வாழ்வாதாரத்திற்கு ஈசாப் வங்கி பெரிதும் உறுதுணையாக இருக்கும் என்றும் பேசினார். வங்கியின் காசாளர் அறையை கமலம் மருத்துவமனை மருத்துவ அலுவலர் வசந்த ராஜ், ஜெயம் தொண்டு நிறுவன தலைவர் கென்னடி, ஆர் ஆர் சி தொண்டு நிறுவன தலைவர் ராமசாமி ஆகியோர் திறந்து வைத்தார்கள். கூட்டுப் பொறுப்புக் குழுக்களுக்கு கடன் வழங்கும் அலுவலகத்தை தீபம் தொண்டு நிறுவன தலைவர் கற்பகவல்லி, விஐபி தொண்டு நிறுவன தலைவர் தலைவர் சரளா ஆகியோர் திறந்து வைத்தார்கள். பாதுகாப்பு பெட்டக அறையை டி பி டி சி தொண்டு நிறுவன தலைவர் திருமதி காசிமணி, சேவா தொண்டு நிறுவன தலைவர் திரு துரைமணி,BSVD தொண்டு நிறுவன தலைவர் ரங்கநாயகி, விப்ரோ தொண்டு நிறுவன தலைவர் திரு. வெங்கடேசன் ஆகியோர் திறந்து வைத்தார்கள். ஈசாப் வங்கியின் ATM. யை மாற்றுத்திறனாளியும்,பசியில்லா தர்மபுரி நிறுவனத் தலைவர் திரு. வினோத் குமார் துவக்கி வைத்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விவசாய பிரிவு தலைவர் திரு சுரேந்தர் அவர்கள் தர்மபுரி மாவட்டத்தில் விவசாய கடனுக்கு மூணு லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் வரை கடன் வழங்கப்படும் எனவும், விவசாய பெருமக்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். இந்நிகழ்வில் வங்கியின் வாடிக்கையாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு புதிய வங்கிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர் . முன்னதாக சீட்ஸ் தொண்டு நிறுவன இயக்குனர் திரு சரவணன் அவர்கள் வரவேற்றார், தர்மபுரி வங்கி கிளை மேலாளர் திரு பிரசாந்த் அவர்கள் நன்றி கூறினார்…