கரகம்மா கோவில் திருவிழா22 ஆண்டுக்கு பின்பு நடந்ததுஓசூர் அருகே எஸ்.முதுகானபள்ளி கிராமத்தில் பழமையான கரகம்மா கோவில் உள்ளது. இந்த கோவிலில் சுவாமிக்கு பூஜை செய்து அதன் பின்பு மண்பானையில் பூ, வெற்றிலை போன்றவற்றை வைத்து பூமிக்கடியில் கோவில் நிர்வாகம் புதைத்து வைப்பது வழக்கம். அதன் பின்பு மீண்டும் திருவிழா நடக்கும் போது அதை எடுத்து பார்த்தால் பூக்கள், வெற்றிலை போன்றவை எதுவுமே கெட்டு போயிருக்காது. இக்கோவிலின் திருவிழா 22 ஆண்டுகளுக்கு பின்பு நேற்று நடந்தது. சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு 200 க்கும் மேற்பட்ட கிடாக்கள் பலி கொடுக்கப்பட்டு பக்தர்களுக்கு அசைவ விருந்து பரிமாறப்பட்டது. அசைவ விருந்தில் கலி, மட்டன், சிக்கன், பிரியாணி போன்ற உணவுகள் பரிமாறப்பட்டன. இந்த திருவிழாவில் பல ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
ஓசூர்
ஓசூர் சோமேஸ்வரர் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிவனுக்கு பால், தயிர், குங்குமம் கொண்டு அபிஷேகம் : ஏராளமான பக்தர்கள் தரிசனம்
ஓசூர் சோமேஸ்வரர் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிவனுக்கு பால், தயிர், குங்குமம் கொண்டு அபிஷேகம் : ஏராளமான பக்தர்கள் தரிசனம்*ஓசூர் ராம்நகரில் பழமை வாய்ந்த ஸ்ரீ சோமேஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இந்த கோயிலில் இன்று பிரதோஷ வழிபாடு வெகு சிறப்பாக நடைபெற்றது. பிரதோஷத்தை முன்னிட்டு சோமேஸ்வர பெருமானுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. அதனைத்தொடர்ந்து மூலவரான சிவனுக்கும் நந்திக்கும் பால், தயிர், வெண்ணெய், பன்னீர், இளநீர், குங்குமம் மஞ்சள், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவியங்களை கொண்டு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. அதனைததொடர்ந்து சிவன், நந்தி உள்ளிட்ட உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகங்களும் அலங்காரங்களும் செய்யப்பட்டன. பின்னர் கோவிலில் அலங்கரிக்கப்பட்ட உற்சவ மூர்த்தியை பக்தர்கள் எடுத்து வந்து சிறப்பு வழிபாடுகள் நடத்தினர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஒசூர் அதியமான் பாலிடெக்னிக் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்..ஒசூர் அதியமான் பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு கம்யூட்டர் சயின்ஸ் படித்த மாணவர்களுக்கு Getster Tech Private Limited software நிறுவனம் வேலை வாய்ப்பு முகாம் நடத்தியது.. இம்முகாமில் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் நேர்முக தேர்வில் கலந்து கொண்டு தேர்வாகினர். தேர்வான மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகளை கல்லுரி முதல்வர் முனைவர் மரியாதைக்குரிய P. இராஜ ரத்தினம் அவர்கள் வழங்கி மாணவர்களை பாரட்டினார்.. கல்லுரியின் மின்னியல் துறை தலைவர் மற்றும் வேலை வாய்ப்பு அலுவலர் K. பாலாஜி பிரகாஷ் அவர்கள் நிறுவன ஹெச்ஆர் மேனேஜர் மற்றும் மாணவர்களுக்கு நன்றி கூறினார் மேலும் புவியரசு, நாகராஜன், திவாகர் போன்ற துறை தலைவர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
தேன்கனிகோட்டையில் திமுக பிரமுகர் முஜமில்பாஷாவின் பிறந்தநாள் விழா
தேன்கனிக்கோட்டை திமுக இளைஞர்அணி நகர அமைப்பாளர் முஜமில்பாஷா அவர்கள் பிறந்த நாளை முன்னிட்டு தேன்கனிக்கோட்டை பேரூராட்சி மன்ற தலைவர் டி ஆர் சீனிவாசன் அவர்கள் முஜமில் பாஷா அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி இனிப்பு வழங்கினார், இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பிரதிநிதி சக்திவேல் நகர துணை செயலாளர் இதயத்துல்லா மற்றும் பலர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் அவர்களின் எளிமையை கண்டு வியந்த மக்கள்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் அவர்களின் எளிமை கண்டு வியந்த மக்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் ஒன்றியம் ஆவத்துவாடி கிராமத்தை சேர்ந்தவர் பெரியண்ணன் ஈஸ்வரி மற்றும் குமாரன் அலமேலு அவர்களின் இல்ல குடும்ப திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. கலெக்டர் அலுவலக முன்னாள் ஊழியர் இல்ல திருமணத்தில் கலந்து கொண்ட கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் மணமக்களான தமிழ்மொழி நவீன்குமார் ஆகியோரை வாழ்த்தினார். திருமண விழாவிற்கு வந்திருந்தத உறவினர்கள் பொதுமக்கள் மாவட்ட ஆட்சித் தலைவரின் எளிமையான செயல்பாடுகளால் வியந்து பாராட்டினர்
பாஜக தேசிய தலைவருடன் அஇஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி தலைமையில் கே.பி.முனுசாமி உள்ளிட்டோருடன் டெல்லியில் நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை
அஇஅதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் நேற்று பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அமிஷா அவர்களை புதுடெல்லியில் நேரில் சந்தித்து வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை கூட்டணி மற்றும் தமிழகத்தில் நடைபெறும் திமுக அரசின் செயல்பாடுகளையும் பற்றி கலந்த ஆலோசித்தார்கள். கழக துணை பொதுச்செயலாளர் கே. பி.முனுசாமி அவர்களும் தமிழக பாரதிய ஜனதா கட்சியினுடைய தலைவர் கே.அண்ணாமலை அவர்களும் முன்னாள் அமைச்சர்கள் சி.வி. சண்முகம், வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்
வன்னியர்களுக்கு 10.5% தனி இடஒதுக்கிடூ வழங்கிட கோரி கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட சூளகிரி ஒன்றிய பாமக சார்பாக சூளகிரி அஞ்சல் அலுவலகத்தில் இருந்து தபால்கள் அனுப்பப்பட்டது.
வேப்பனம்பள்ளி சட்டமன்ற தொகுதி சூளகிரி ஒன்றியத்தின் சார்பாக வன்னியர்களுக்கான கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.5%இட ஒதுக்கீடு வேண்டி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கட்சியின் மாநில தலைவர் திரு அன்புமணி ராமதாஸ் MP அவர்களின் ஆணைக்கிணங்ககிருஷ்ணகிரி மத்திய மாவட்ட செயலாளர் அண்ணன் இளங்கோ அவர்களின் வழிகாட்டுதலில் இன்று சூளகிரி ஒன்றியத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் திரு மு க ஸ்டாலின் அவர்களுக்கும், மாண்புமிகு நீதியரசர் வி .பாரதிதாசன் ,தலைவர் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அவர்களுக்கும் முதற்கட்டமாக சுமார் 300 தபால்கள் அனுப்பப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சூளகிரி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜெகதீசன், மேற்கு ஒன்றிய செயலாளர் மாதேஷ், வடக்கு ஒன்றிய செயலாளர் சங்கர் APS முன்னிலை வகுத்தனர், திரு வெங்கடேஷ் செட்டியார் மாநில துணைத்தலைவர், திரு தியாகராஜ நாயுடு மாவட்ட தலைவர் மத்திய மாவட்டம், திரு வரதராஜன் கொள்கை பரப்பு செயலாளர்,திருமதி தமிழ்ச்செல்வி வரதராஜன், த.கி நந்தகுமார் மாவட்ட இளைஞரணி செயலாளர் ,சிவக்குமார் கவுடா சூளகிரி கிழக்கு ஒன்றிய தலைவர், திரு ராஜ்குமார் அன்புமணி தம்பிகள் படை மாவட்ட துணை செயலாளர், திரு ராமசாமி, திரு முருகன் OMM, திரு பாலாஜி செட்டியார், சம்பத் ஐயங்கார், திரு ராமமூர்த்தி, திரு ஆறுமுகம், திரு திருப்பதி, திரு கேபிள் சேட்டு, திரு சக்தி, திரு கிருஷ்ணன், திரு முனியப்பன், திரு சௌந்தர், திரு ரகு, திரு நாகராஜ், திரு விஜயன், முனியப்ப கவுண்டர், ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஒசூர் மாநகராட்சி 22வது வார்டில் மாநகர மேயர் எஸ்.ஏ.சத்யா அவர்கள் அதிகாரிகளுடன் திடீர் ஆய்வு மேற்க்கொண்டு, பொதுமக்களின் குறைகளை மனுக்களாக பெற்றுக்கொண்டார்
ஒசூர் மாநகராட்சி 22வது வார்டிற்குட்பட்ட அன்னைநகர் உள்ளிட்ட பகுதிகளில் மாநகர மேயர் அதிகாரிகளுடன் திடீர் ஆய்வு மேற்க்கொண்டு, பொதுமக்களின் குறைகளை மனுக்களாக பெற்றுக்கொண்டார்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி 22வது வார்டிற்குட்பட்ட அன்னை நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஓசூர் மாநகர மேயர் S.A.சத்யா அவர்கள், மாநகர ஆணையாளர் சிநேகா உள்ளிட்டோருடன் திடீர் ஆய்வு மேற்க்கொண்டார்
சாலை வசதி, குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்ததுடன் பொதுமக்களின் குறைகளை கோரிக்கை மனுக்களாக பெற்றுக்கொண்டார்
அப்போது 22வது மாமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் மற்றும் குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்
ஓசூர் மாநகராட்சி பகுதிகளில் ரூ.5 கோடியே 18 இலட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட அந்திவாடி அரசு உயர்நிலைப்பள்ளி, ஜூஜூவாடி, ஆனந்த்நகர் உள்ளிட்ட பகுதிகளில் ரூ.5 கோடியே 18 இலட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தீபக் ஜேக்கப் இ.ஆ.ப., அவர்கள் இன்று (19.04.2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட அந்திவாடி அரசு உயர்நிலைப்பள்ளி, ஜூஜூவாடி, ஆனந்த்நகர் உள்ளிட்ட பகுதிகளில் ரூ.5 கோடியே 18 இலட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தீபக் ஜேக்கப் இ.ஆ.ப., அவர்கள் இன்று (19.04.2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், அந்திவாடி அரசு உயர்நிலைப்பள்ளியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.48 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் சமையல் கூடம் மற்றும் சுற்றுசுவர் அமைக்கும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகள் தரமாகவும், விரைவாகவும் முடித்து பயன்பாட்டிற்கு விட வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து, அந்திவாடி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், கிருஷ்ணகிரி பிரிவு, அந்திவாடி விளையாட்டு மைதானத்தில் உள்ள உள்விளையாட்டு அரங்கம், நீச்சல் குளம், நடைபாதை உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டு விளையாட்டு மைதானத்தில் கூடுதலாக மேற்கொள்ளப்பட வேண்டிய அடிப்படை கட்டமைப்பு வசதிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் மற்றும் வருவாய் துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து, ஏ.எஸ்.டி.சி ஹட்கோவில் 2021 -2022 ம் நிதியாண்டில் 15-வது நிதிக்குழு மான்ய நிதியில் ரூ.25 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் குப்பை தரம் பிரிக்கும் கட்டிட கட்டுமான பணிகளையும், நுண்ணுயிர் செயலாக்க மையத்தில் மாநகராட்சியிலிருந்து நாள்தோறும் 5 முதல் 7 டன் வரை சேகரிக்கப்படும் குப்பைகளை தரம் பிரித்து உரம் தயாரிக்கும் பணிகளையும், உரங்கள் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யும் பதிவேடுகளையும், பணியாளர்கள் விவரங்களையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், ஜூஜூவாடி பகுதியில் 2022-2023 -ம் நிதியாண்டில் 15-வது நிதிக்குழு திட்டத்தின் (Tied) கீழ் ரூ.2 கோடியே 50 இலட்சம் மதிப்பில் 10 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி அமைக்கப்பட்டு வரும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, நீர்த்தேக்க தொட்டியின் கட்டுமான பணிகள் தரமாகவும், விரைவாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விரைந்து வழங்க வேண்டும் என மாநகராட்சி பொறியாளர்களுக்கும், ஒப்பந்ததாரர்களுக்கும் உத்தரவிட்டார். மேலும், ஜூஜூவாடி ரூ.25 இலட்சம் மதிப்பில் 15-வது நிதிக்குழு மான்ய திட்டத்தின் கீழ் நகர்ப்புற நலவாழ்வு மைய கட்டிட கட்டுமான பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, ஆனந்த் நகரில் தூய்மை இந்தியா திட்டம் 2.0 திட்டத்தின் கீழ் தலா ரூ.85 இலட்சம் வீதம் ரூ.1 கோடியே 70 இலட்சம் மதிப்பில் குப்பை தரம் பிரிக்கும், 2 கட்டிடங்களின் கட்டுமான பணிகளையும், குப்பைகள் தரம் பிரித்து, பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்து மீண்டும் உபயோகப்படுத்தும் வகையில் மூலப்பொருட்களாக மாற்றும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது, ஓசூர் மாநகராட்சி ஆணையர் திருமதி.த.சினேகா இ.ஆ.ப., ஓசூர் சார் ஆட்சியர் திருமதி.ஆர்.சரணியா இ.ஆ.ப., மாநகர் நல அலுவலர் மரு.அஜித்தா, உதவி செயற்பொறியாளர் திரு.சீனிவாசன், மாநகராட்சி பொறியாளர் திரு.ராஜேந்திரன், வட்டாட்சியர் திரு.சுப்ரமணி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள், வருவாய் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 21.04.2023 அன்று நடைபெற உள்ளது
கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் துறை நிறுவனங்களும் -தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள வேலைநாடுநர்களும் கலந்து கொள்ளும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 2104.2023 அன்று நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் திருதீபக் ஜேக்கப் இஆப, அவர்கள் தகவல்.
கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஒவ்வொரு மாதமும் மாதத்தின் மூன்றாம் வெள்ளிக்கிழமை அன்று சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இம்மாதம் மூன்றாம் வெள்ளிக்கிழமையான 21042023 அன்று காலை 10.00 மணி அளவில் இவ்வலுவலகத்தில் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இது ஒரு இலவச பணியே ஆகும். இதனால் தங்களுடைய வேலைவாய்ப்பு பதிவு இரத்து செய்யப்படமாட்டாது.
இம்முகாமில் கிருஷ்ணகிரி மற்றும் ஓசூரை சேர்ந்த தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்திற்கு தகுதி உள்ள வேலைநாடுநர்களை தேர்வு செய்ய உள்ளனர். இதில் SSLC, HSC ITI DIPLOMA மற்றும் பட்டப்படிப்பு படித்தவர்கள் தங்களுடைய சுயவிவரத்துடன் (BIO.DATA) கலந்து கொண்டு பயனடையலாம் என
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருதீபக் ஜேக்கப் இஆப., அவர்கள்
தெரிவித்துள்ளார்.