காவேரிப்பட்டணம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் துய்மை பாரதம் இயக்கம்திடக்கழிவு மேலன்மை திட்டத்தின் கீழ் மின்சார மூலம் இயங்கும் குப்பைகளை சேகரிக்கும் முன்று சக்கர வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி காவேரிப்பட்டணம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில்காவேரிப்பட்டணம் மேற்கு ஒன்றிய செயலாளரும் ஒன்றிய குழு தலைவருமான பையூர் P.ரவி அவர்கள் தலைமையிலும்காவேரிப்பட்டணம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முன்னிலையிலும் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும் கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினருமான K.அசோக்குமார் அவர்கள் காவேரிப்பட்டணம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளுக்கு மின்சார முலம் இயங்கும் குப்பைகளை சேகரிக்கும் மூன்று சக்கர வாகனங்கள் வழங்கப்பட்டதுஇந்நிகழ்ச்சியில் ஒன்றிய குழு உறுப்பினர்களும் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்களும் மாவட்ட ஆவின் பால் உற்பத்தி தலைவர் பி.கே.குப்புசாமி,காவேரிப்பட்டணம் பேரூராட்சி கழக செயலாளர் எம்.விமல், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சங்கிதாகேசவன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் ஜெ.ஜெயக்குமார்,மாவட்ட மாணவரணி செயலாளர் கே.பி.மோகன், ஒன்றிய குழு உறுப்பினர்சவிதாவிக்ரம்குமார்,ஒன்றிய குழு உறுப்பினர் அம்பிகாசரவணன்,ஒன்றிய குழு உறுப்பினர்எஸ்.கணேசன், மலையாண்டஹள்ளி ஊராட்சி மன்ற தலைவர் சரசுகோவிந்தசாமி, நகர அம்மா பேரவை செயலாளர்கார்த்திக்,திம்மாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் துரைசாமி, ஜெகதாப் ஊராட்சி மன்ற தலைவர் கன்னியம்மாள் ராமுர்த்தி ஒன்றிய அவைத் தலைவர் சுந்தர்,சாப்பரம் ஊராட்சி மன்ற தலைவர் முருகன், குடிமேனஹள்ளி ஊராட்சி மன்ற தலைவர் முருகையன், முன்னாள் கவுன்சிலர் ராஜா, ஒன்றிய துணை செயலாளர்தனலட்சுமிமுனிராஜ்,நகர தகவல் தொழில்நுட்பு பிரிவு செயலாளர் ஆர்.பாலாஜி,ஊராட்சி தகவல் தொழில்நுட்பு பிரிவு செயலாளர் ரங்கநாதன், விக்னேஷ், கராத்தே மாஸ்டர் ஷிகான் மாரியப்பன்மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
கிருஷ்ணகிரி
ஓசூர் முனீஸ்வர் நகர் பகுதி சாலையோர கடைகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் முயற்சி! பாஜக மாவட்ட தலைவர் எம்.நாகராஜ் மாநகராட்சி அதிகாரிகளிடம் பேசி சமரசம் ஏற்படுத்தினார்
ஓசூர் முனீஸ்வர் நகர் பகுதியில் உள்ள சாலையோர கடைகளை மாநகராட்சி நிர்வாகம் எந்தஒரு முன் அறிவிப்பும் இல்லாமல் அகற்ற வியாபாரிகளை வற்புறுத்தியதை தொடர்ந்து கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாஜக தலைவர் எம்.நாகராஜ் தலைமையில் பாஜகவினர் வியாபாரிகளுடன் இணைந்து போராட்டம் நடத்தி மாநகராட்சி நிர்வாகத்தின் செயலை கண்டித்து கண்டனம் தெரிவித்தனர். அதன் பின் சாலையோர வியாபாரிகளுடன் மாநகராட்சி அலுவலகம் சென்று அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வியாபாரிகளுக்கு சாதகமாக மாநகராட்சி நிர்வாகம் செயல்பட உறுதியளிக்க செய்யப்பட்டது. உடன் பாஜக நிர்வாகிகள் ஸ்ரீனிவாசன் முருகன் ராஜசேகர் மஞ்சுநாத் பிரவீன்குமார் கிஷோர் நகர தலைவர்கள் ரமேஷ் கண்ணன் மணிகண்டன் நாகேந்திரன் உட்பட பலர் இருந்தனர் …
கிருஷ்ணகிரியில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு தலைமையில் நடைபெற்றது.
விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கே.எம்.சரயு இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் இன்று (26.05.2023) நடைபெற்றது.கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கே.எம்.சரயு இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (26.05.2023) நடைபெற்றது.மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கே.எம்.சரயு இ.ஆ.ப., அவர்கள்தெரிவித்ததாவது:கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 28.04.2023 அன்று நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், விவசாயிகளிடமிருந்து ஏரி, கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு அகற்றுதல், பட்டா வழங்குதல், நீர்வழிப்பாதைகளை சீரமைத்தல், பயிர்கடன், தென்பெண்ணையாற்றில் கழிவு நீர் கலப்பதை தடைசெய்தல், வன விலங்குகள் ஊருக்குள் வருவதை தடை செய்தல், தோட்டக்கலைத்துறை சார்பாக நாற்றுகள் வழங்குவது, கால்நடைத்துறை சார்பாக கிளை கால்நடை மருந்தகம் துவக்குதல், விவசாய மின் இணைப்புகள் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து பெறப்பட்ட 242 மனுக்கள் பெறப்பட்டு, 197 – மனுக்களுக்கு துறை சார்ந்த அலுவலர்கள் பதிலளித்தனர்.இன்று (26.05.2023) நடைபெற்ற விவசாய குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகளிடமிருந்து காவேரிப்பட்டணம், பையூர் பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலையோரம் வைத்துள்ள மாம்பழ கடைகள், சாலையில் இருந்து 20 அடி தூரம் தள்ளி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். யானைகளால் ஏற்படும் பயிர்சேதங்களுக்கு கடந்த 15 ஆண்டுகளாக ஏக்கருக்கு, ரூ.25 ஆயிரம் மட்டுமே இழப்பீடு வழங்கி வருகின்றனர். இதே போல் யானை தாக்கி காயம் அடைபவர்களுக்கு ரூ.60 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படுகிறது. எனவே, பயிர் மற்றும் யானை தாக்கி படுகாயம் அடைபவர்களுக்கான இழப்பீடு தொகை உயர்த்தி வழங்க வேண்டும். யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்கும் வகையில் சோலார் மின்வேலிகள் அமைக்க வேண்டும். மயில்கள், குரங்குகளால் ஏற்படும் பயிர் சேதங்களுக்கு இழப்பீடு வழங்க அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்க வேண்டும்.தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி பகுதிகளில் ஆழ்துளை கினாறுகளில் 700 அடிக்கு கீழ் தான் தண்ணீர் கிடைக்கிறது. சொட்டு நீர் பாசனம் அமைத்துள்ளோம். 7 ஆண்டுகளுக்கு ஒரு முறை சொட்டு நீர்பாசனம் அமைக்க அரசு மானியம் வழங்குவதை, 5 ஆண்டுகளாக குறைக்க வேண்டும். நாராயணன்ராவ் ஏரி கரையை பலப்படுத்திட வேண்டும். விவசாயிகள், நுகர்வோர் பயன்பெறும் வகையில், காவேரிப்பட்டணம் உழவர் சந்தையை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். வாரச்சந்தைகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்திட வேண்டும். வாரிசு, இறப்பு உள்ளிட்ட சான்றிதழ்கள் தாமதம் இல்லாமல் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். கடந்த 4 ஆண்டுகளாக தென்னை சார்ந்த அனைத்து பொருட்களின் விலையும் சரிந்து வருகிறது. தேங்காய் விலை ரூ.20 -ல் இருந்து ரூ.8 -க்கும், தென்னை நாற்றுக்கள் ரூ.100 -ல் இருந்து ரூ.10 -க்கும், தேங்காய் பூ விலை ரூ.40 -ல் இருந்து ரூ.10 -க்கும் சரிந்துள்ளது. எனவே, அரசு தேங்காய்க்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்யணம் செய்ய வேண்டும். அதன்படி தேங்காய் ரூ.25ம், தென்னை நாற்றுக்கு ரூ.160 -ம், கொப்பரைக்கு கூடுதல் விலையும் நிர்ணயம் செய்திட வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்னை ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும். மா நர்சரிகளுக்கு மானியத்துடன் கூடிய கூட்டுறவு வங்கி கடன்கள் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து 240 மனுக்கள் அளித்துள்ளனர்.விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றும் விதமாக தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க காவல்துறை மூலம் கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும். யானைகள் சேதமாகும் பயிர்களுக்கு இழப்பீடு தொகை உயர்த்தி வழங்குவத அரசின் கொள்கை முடிவை சார்ந்தது. இருப்பினும், விவசாயிகளின் கோரிக்கை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். கொப்பரை தேங்காய்கள் அதிகப்பட்ச விலைக்கு, கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொள்முதல் செய்யப்படுகிறது. தென்னை சார்ந்த கோரிக்கைகள் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். தென்னை ஆராய்ச்சி மையம் கோரி தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்திற்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், மாவட்டத்தில் உள்ள உழவர்சந்தைகள், வாரச்சந்தைகளில் திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். அதற்குள் சந்தைகளில் தொடர்புடைய அலுவலர்கள் அடிப்படை வசதிகள் மேம்படுத்திட வேண்டும். இல்லாவிட்டால், தொடர்புடைய அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மாரச்சந்திரம் மற்றும் படேதலாவ் கால்வாயில் தற்போது தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. இக்கால்வாயில் அடைப்பு இடங்களில் உடனடியாக சரி செய்யப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.செ.ராஜேஸ்வரி, மாவட்ட வன அலுவலர் செல்வி.கார்த்திகேயனி இ.வ.ப., வேளாண்மைத்துறை இணை இயக்குநர் திரு.முகமது அஸ்லாம், தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் திரு.பூபதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) திரு.கிருஷ்ணமூர்த்தி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், விவசாய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
அஇஅதிமுக மாவட்ட சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் கழக இல்ல வளிமா விழா.
அஇஅதிமுக மாவட்ட சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் கழக இல்ல வளிமா விழா. கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டம் கெலமங்கலம் சுல்தான்பேட்டையில்,K.S.சையத்அசேன் மாவட்ட செயலாளர் சிறுபான்மை பிரிவு, முன்னாள் தலைவர், கெலமங்கலம் பேரூராட்சி இல்லவளிமா விழா நடைபெற்றது, மணமக்கள் J.அம்ரீன்தாஜ் K.S.சையத்கலீம்ஆகியோரின்வளிமாவை அஇஅதிமுக துணை பொதுச்செயலாளர்K.P.முனுசாமி MLA. மணமக்களை வாழ்த்தினார்,இந்த நிகழ்ச்சியில் கலந்து கெலமங்கலம் தேர்வுநிலை பேரூராட்சி மன்ற தலைவர் கே பி தேவராஜ், அஇஅதிமுக கட்சி நகர செயலாளர் மஞ்சுநாத், மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
IAS தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவியை இல்லம் தேடிச் சென்று வாழ்த்து தெரிவித்தார் மாவட்ட கழக செயலாளர் தே.மதியழகன் MLA.
IAS தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவியை இல்லம் தேடிச் சென்று வாழ்த்து தெரிவித்த மாவட்டச் கழக செயலாளர் தே.மதியழகன் MLA IAS தேர்வு முடிவுகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது இந்த தேர்வில் கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் ஒன்றியம், கருங்காலிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ரவி – கோமதி தம்பதியினரின் மகள் கே.ஆர்.ஹரிணி இவர் IAS தேர்வில் அகில இந்திய அளவில் 289 ஆவது இடம் பெற்று தேர்ச்சி பெற்றார். IAS தேர்வில் தேர்ச்சி பெற்ற கே.ஆர். ஹரிணி அவர்களது இல்லத்திற்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட கழக செயலாளரும் பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தே.மதியழகன் MLA அவர்கள் நேரில் சென்று IAS தேர்வில் வெற்றி பெற்று கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்தமைக்காக சால்வை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். மேலும் ஹரிணி ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெறுவதற்கு ஊக்கமும் ஆக்கம் அளித்த அவரது பெற்றோரை வெகுவாக பாராட்டி வாழ்து கூறினார்.
பெத்ததாளப்பள்ளி மண்டு மாரியம்மன் விழாவினை சிறப்பாக நடத்திய 32 ஊர்கவுண்டர்களைப் பாராட்டி தமிழ்நாடு ஜல்லிகட்டு பயிற்சி மையத்தின் சார்பில் நினைவு பரிசுகள் வழங்கிப் பாராட்டப்பட்டது.
பெத்ததாளப்பள்ளி மண்டு மாரியம்மன் விழாவினை சிறப்பாக நடத்திய 32 ஊர்கவுண்டர்களைப் பாராட்டி தமிழ்நாடு ஜல்லிகட்டு பயிற்சி மையத்தின் சார்பில் நினைவு பரிசுகள் வழங்கிப் பாராட்டப்பட்டது.கிருஷ்ணகிரி அருகே உள்ளபெத்த தாளப்பள்ளி கிராமத்தில் எழுந்திருள்ளமண்டு மாரியம்மன் திருக்கோயில் கடந்த 11 ஆண்டுகளுக்கு பிறகு 32 கிராமங்கள் ஒன்றுணைந்து நடத்திய மாபெரும் மாரியம்மன் திருவிழா வெகுவிமர்ச்சியாக நடைப்பெற்றது.இந்த திருவிழாவின்போது அம்மனுக்கு பால்குடம் எடுத்தும், முளைப்பாரி எடுத்தல், பெங்கலிடுதல் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டது.இந்த விழாவில் முக்கிய நிகழ்வாக மாடு விடும் திருவிழா நடைப்பெற்றது.இதில் பல்வேறு கிராமங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட மாடுகளுக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் பூஜைகள் செய்யப்பட்டது பின்னால் நாடுகளை கௌரவிக்கும் வகையில் கோவிலை சுற்றி எருதாட்டம் நடத்தப்பட்டது.கடந்த ஒரு வாரங்களாக ஸ்ரீமண்டு மாரியம்மன் திருவிழாவினை சிறப்பாக நடத்தி முடித்த 32 கிராம ஊர்க்கவுண்டர்களைசிறப்பிக்கும் வகையில் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பயிற்சி மையத்தின் சார்பில் நினைவு பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது,இந்த நினைவு பரிசுகளை முன்னாள் ராணுவத்தை சேர்ந்த கார்கில் பெருமாள், கேப்டன் ரமணா மற்றும் முன்னால் ராணுவ வீரர்களான அசோகன், ஆறுமுகம்,மாணிக்கம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு ஊர்கவுண்டர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கிப்பாராட்டினார்கள்.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் 29-05-2023 அன்று கிருஷ்ணகிரியில் நடைபெற உள்ளது! மாவட்ட கழக செயலாளர் தே.மதியழகன் MLA அவா்கள் அறிக்கை!
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் 29-05-2023 அன்று கிருஷ்ணகிரியில் நடைபெற உள்ளது! மாவட்ட கழக செயலாளர் தே.மதியழகன் MLA அவா்கள் அறிக்கை.கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் மாவட்ட அவைத்தலைவர் டி.ஏ.நாகராஜ் தலைமையில்29.05.2023 திங்கட்கிழமை காலை 10-00 மணிக்குகிருஷ்ணகிரி தேவராஜ் மஹாலில் நடைபெற உள்ளது. கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட கழக மாநில நிர்வாகிகள்,முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக மூத்த முன்னோடிகள்,மாவட்ட,ஒன்றிய,நகர, பேரூர் கழக செயலாளர்கள்,முன்னாள் இன்னால்நிர்வாகிகள்,அனைத்து அணிகளின் அமைப்பாளர்,துணை அமைப்பாளர்கள்,மாவட்ட ஊராட்சி குழு, ஒன்றிய குழு,நகராட்சி,பேரூராட்சி தலைவர்கள், கவுன்சிலர்கள், BLA – 2,கிளை கழக செயலாளர்கள் உள்ளிட்ட அனைவரும் தவறாமல் இந்த மாவட்ட பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.பொருள் :1.தமிழினத் தலைவர்,முத்தமிழறிஞர் டாக்டா்.கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா கொண்டாடுவது குறித்து.2. புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது குறித்து.3.கழக ஆக்கப்பணிகள் குறித்து.*தே.மதியழகன்.MLA,*மாவட்ட செயலாளர், பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்,கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக.
புதியதாக பணி நியமனம் பெற்ற நிலஅளவர் மற்றும் வரைவாளர்களுக்கு நில அளவீடு மேற்கொள்ளும் பயிற்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கே.எம்.சரயு இ.ஆ.ப. அவர்கள் துவக்கி வைத்தார்.
புதியதாக பணி நியமனம் பெற்ற நிலஅளவர் மற்றும் வரைவாளர்களுக்கு நில அளவீடு மேற்கொள்ளும் பயிற்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கே.எம்.சரயு இ.ஆ.ப. அவர்கள் துவக்கி வைத்தார்.கிருஷ்ணகிரி வட்டம், பையனப்பள்ளி ஊராட்சியில், நில அளவை மற்றும் நிலவரித் திட்டத்துறை சார்பாக புதியதாக பணிநியமனம் பெற்ற நிலஅளவர் மற்றும் வரைவாளர்களுக்கு லிங் செயின் மற்றும் டிஜிட்டல் க்ளோபல் பொசிசன் சிஸ்டம் மூலம் நிலஅளவீடு செய்வது குறித்த பயிற்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கே.எம்.சரயு இ.ஆ.ப., அவர்கள் இன்று (26.05.2023) துவக்கி வைத்து பார்வையிட்டார்.மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கே.எம்.சரயு இ.ஆ.ப., அவர்கள்தெரிவித்ததாவது:வருவாய்த்துறை நிருவாக அமைப்புக்கு முதுகெலும்பாக விளங்குவதோடு, சாமானிய மக்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும், அரசின் பல்வேறு சமூகப் பொருளாதாரத் திட்டங்களை செயல்படுத்துவதிலும் முக்கிய பங்காற்றுகிறது. மழை, வெள்ளம், புயல் போன்ற பேரிடர் காலங்களில் மக்கள் துயர் துடைக்கும் துறையாகவும் இத்துறை விளங்கி வருகிறது. இத்துறையின் பணியினை மேலும் செம்மைப்படுத்தும் வகையில் அனைத்து வசதிகளுடன் கூடிய அலுவலகக் கட்டடங்கள் கட்டுதல், துறை அலுவலர்களுக்கு குடியிருப்புகள் கட்டுதல், புதிய வருவாய் வட்டங்களை உருவாக்குதல், காலிப் பணியிடங்களை நிரப்புதல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.அந்த வகையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் கீழ் இயங்கும் நிலஅளவை மற்றும் நிலவரித்திட்ட துறையில் காலியாக உள்ள நிலஅளவர் மற்றும் வரைவாளர் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக தேர்வு நடத்தப்பட்டு தேர்வு செய்யப்பட்ட நில அளவர்கள் மற்றும் வரைவாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 15.05.2023 அன்று வழங்கினார். இப்பணி நியமனம் மூலமாக பல்வேறு ஆண்டுகளாக பட்டா வழங்கப்படுவதில் இருந்து வந்த சிரமங்களை நீக்குவதற்கும், நிலம் மற்றும் நில அளவை சார்ந்த அனைத்து சேவைகளையும் உடனடியாக வழங்குவதற்கு உதவிகரமாக இருக்கும்.கிருஷ்ணகிரி காவல் ஆயுதப்படை கூட்டரங்கில், புதியதாக பணிநியமனம் பெற்ற கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த நில அளவர்கள் மற்றும் வரைவாளர்கள் என மொத்தம் 70 நபர்களுக்கு 30 நாட்கள் பயிற்சியை 22.05.2023 அன்று துவக்கப்பட்டது.இப்பயிற்சியில் நில அளவை எப்படி மேற்கொள்வது, நில வரைபடம் தயார் செய்வது, லிங்க் செயின் மற்றும் டிஜிட்டல் க்ளோபல் பொசிசன் சிஸ்டம் மூலம் நிலஅளவீடு செய்வது, புலன் எல்லை நிர்ணயம் செய்தல், தனி உட்பிரிவு அளவீடு செய்யும் பணிகள், புலம் முச்சந்தியில் கற்கள் நடும் பணிகள் போன்ற பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. எனவே இப்பயிற்சியில் கலந்து கொண்ட நில அளவர்கள் மற்றும் வரைவாளர்கள் நல்ல முறையில் பயிற்சி பெற்று சிறந்த முறையில் பணியாற்ற வேண்டும் என ஆட்சித்தலைவர் திருமதி.கே.எம்.சரயு இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், உதவி இயக்குநர் (நிலஅளவை) திரு.சி.சேகரன், கோட்ட ஆய்வாளர்கள் திரு.எம்.கிருஷ்ணமூர்த்தி, திரு.ராமசந்திரன், அலுவலக மேலாளர் திரு. சரவணன், பயிற்சியாளர்கள் திரு.ஜெயகுமார், திரு.சிவகுமார் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.
கிருஷ்ணகிரி அருகே வெள்ளிமலை மீது அமைந்து இருக்கும் ஸ்ரீவள்ளிதெய்வானை ஸ்ரீ முருகப்பெருமான் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் நடைப்பெற்றது
கிருஷ்ணகிரி அருகே வெள்ளிமலை மீது அமைந்து இருக்கும் அருள்மிகு ஸ்ரீவள்ளிதெய்வானை ஸ்ரீ முருகப்பெருமான் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் வெகுவிமர்ச்சியாக நடைப்பெற்றது, இதில திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டுவழிப்பட்டனர்.கிருஷ்ணகிரி அருகே உள்ள பெரியமோட்டூர் வெள்ளிமலைமீது அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீவள்ளிதெய்வானை ஸ்ரீ முருகப்பெருமான் திருக்கோவிலின் மஹா கும்பாபிஷேகம் வெகுவிமர்ச்சியாக நடைப்பெற்றது.இந்த திருக்கோவில் மகா கும்பாபிஷேக உற்சவம் நேற்று முன்தினம் யாகசாலை பூஜைகளுடன் துவங்கி நடைபெற்றது. இதில் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்து ஹோமம், பூரணாதி ஹோமம்உள்ளிட்ட பல்வேறு வைபவங்கள் நடந்தேறியது. இதன் முக்கிய நிகழ்வான கோவில் கோபுரத்திற்கான மகா கும்பாபிஷேகம் திருக்கோவிலில் முன்பு அமைக்கப்பட்டு இருந்த பிரம்மாண்ட யாகசாலையில் புனித நதிகளின் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் கொண்ட கலசங்களை வைத்து சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து சிவாச்சாரியார்கள் அந்த புனித நீர் அடங்கிய கலசத்தை தலையில் சுமந்தவாறு திருக்கோவிலை வலம் வந்தனர். தொடர்ந்து புனித நீர் கொண்ட கலசங்களுடன் வேத மந்திரங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் சுமந்து வந்த கலசங்களில் இருந்து புனித நீரை கோபுரத்தின் கலசத்தின் மீது ஊற்றி மஹாகும்பாபிஷேக வைபவம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து மூலவர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் அலங்கார தீபாதரனைகளும் நடைப்பெற்றது,இந்த கும்பாபிஷேக விழாவில் கிருஷ்ணகிரி, பெரியமோட்டூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு ஸ்ரீ முருகப்பெருமானை தரிசனம் செய்து வழிப்பட்டனர்.இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை பெரியமோட்டூர் வெள்ளிமலை ஸ்ரீ முருகர்ஆலய அறக்கட்டளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர்கவுண்டர்கள், ஊர்மக்கள் சிறப்பாக செய்து இருந்தனர்கள்,
ஊத்தங்கரையில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை சார்பாக ரூ.7.13 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் தகே.எம்.சரயு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை சார்பாக ரூ.7 கோடியே 13 இலட்சத்து 5 ஆயிரம் மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கே.எம்.சரயு இ.ஆ.ப., அவர்கள் இன்று (25.05.2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டவெங்கடதாம்பட்டி, ஊத்தங்கரை பேரூராட்சி, சிங்காரப்பேட்டை, மிட்டப்பள்ளி ஆகிய ஊராட்சிகளில் ஊரசு வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை சார்பாக ரூ.7 கோடியே 13 இலட்சத்து 5 ஆயிரம் மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கே.எம்.சரயு இ.ஆ.ப., அவர்கள் இன்று (25.05.2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வெங்கடாதாம்பட்டி ஊராட்சியில், பாரத பிரதமர் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் (2021-2022) ஊத்தங்கரை முதல் பெருமாள்குப்பம் வரை சுமார் 6 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.2 கோடியே 79 இலட்சத்து 66 ஆயிரம் மதிப்பில் தார்சாலை அமைக்கும் பணி, அச்சாலையின் குறுக்கே 6 கல்வெட்டுகள் அமைக்கும் பணிகள் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், தனிநபர் நிலத்தில் ரூ.2 இலட்சம் மதிப்பில் மணவரப்பு அமைக்கும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.தொடர்ந்து, ஊத்தங்கரை பேரூராட்சியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகத்தில் குழந்தைநேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் (2022-2023) ரூ.44 இலட்சம் மதிப்பில் 3 வகுப்பறைகள் கட்டிட கட்டுமான பணிகளை பார்வையிட்டு, கட்டுமான பணிகளுக்கு தேவையான செங்கல், கம்பி, சிமெண்ட் உள்ளிட்ட பொருட்களின் தரத்தினை ஆய்வு மேற்கொண்டார்.பாம்பாறு அணை வளாகத்தில் உள்ள இலங்கை வாழ் தமிழர் குடியிருப்பு வளாகத்தில் இலங்கை வாழ் தமிழர்களுக்காக ரூ.1 கோடியே 87 இலட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டு வரும் 37 வீடுகளின் கட்டுமான பணிகளையும், இக்குடியிருப்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.63 இலட்சம் மதிப்பில் கூடுதல் வசதிகளாக தெரு விளக்கு, குடிநீர் இணைப்பு, கழிவுநீர் கால்வாய், சிமெண்ட் சாலைகள் அமைக்கப்பட்டு வரும் பணிகளையும், இதர அடிப்படை வசதிகளுக்காக ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ.23 இலட்சம் மதிப்பில் கூடுதல் கட்டுமான பணிகள் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கும் பணிகளை பார்வையிட்டார்.அதனைத்தொடர்ந்து, மிட்டப்பள்ளி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் (2021-2022) 95 மீட்டர் நீளத்திற்கு ரூ.8 இலட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் சிமெண்ட் சாலை மற்றும் கழிவு நீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ள பணிகளையும், மழைநீரை சேகரிக்கும் பொருட்டு அமட்டன்குட்டையில் ரூ.8 இலட்சத்து 21 ஆயிரம் மதிப்பில் தூர்வாரும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, மழைக்காலத்திற்கு முன்பாக குட்டை தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.மேலும், சிங்காரப்பேட்டை ஊராட்சி, ஆவாரங்குட்டையில் மலைவாழ் மக்களுக்கு வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் தலா ரூ.3 இலட்சம் வீதம் 16 இருளர் இன மக்களுக்கு ரூ.48 இலட்சம் மதிப்பில் வீடுகள் கட்டுமான பணிகளையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.12 இலட்சத்து 10 ஆயிரம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டு வரும் அங்கள்வாடி மைய கட்டிட கட்டுமான பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.தொடர்ந்து, நார்சாம்பட்டி ஊராட்சியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்திற்காக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.7 இலட்சத்து 43 ஆயிரம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டு வரும் சமயலறை கட்டிட கட்டுமான பணிகளையும், சிங்காரப்பேட்டை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகத்தில் குழந்தைநேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் (2022-2023) ரூ.30 இலட்சத்து 45 ஆயிரம் மதிப்பில் கூடுதலாக இரண்டு வகுப்பறை கட்டிடங்களின் கட்டுமான பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பள்ளிகள் துவங்க உள்ள நிலையில் மாணவர்களின் வசதிக்காக கட்டுமான பணிகள் விரைந்து முடிக்க வேண்டும்.ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் சாலைப்பணிகளை மழைக்காலம் துவங்குவதற்கு முன்பாக முடித்திட வேண்டும். பொதுமக்களுக்கு தடையில்லா குடிநீர் வழங்கும் பணிகளை உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கே.எம்.சரயு இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்,முன்னதாக, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றிய அலுவலத்தை ஆய்வு மேற்கொண்டு, பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்தும், மேற்கொண்டு செயல்படுத்தப்பட வேண்டிய அடிப்படை கட்டமைப்பு பணிகள் குறித்து, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய குழு தலைவர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் கேட்டறிந்தார்.இந்த ஆய்வுகளின்போது, ஒன்றிய குழு தலைவர் திருமதி.உஷா குமரேசன், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் திரு.ரஜினிசெல்வம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.வேடியப்பன், திரு.சிவபிரகாசம், ஒன்றிய பொறியாளர் திரு.மாதையன், ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள் திரு.இலட்சுமணன், திரு.மகாராஜா, திரு.முருகன், திரு.கண்ணன், ஊராட்சி மன்ற தலைவர்கள் திருமதி.சத்யவாணி ராஜா (கொண்டம்பட்டி), திருமதி.சின்னதாயி (மிட்டப்பள்ளி) மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.