*உயிர் காக்கும் உத்தம பணியில் மருதம் நெல்லி ஜெயம் கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள்*தருமபுரி நல்லானூர் மருதம் நெல்லி ஜெயம் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் இளைஞர் செஞ்சிலுவை சங்கம் சார்பாக இரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கல்லூரி பேராசிரியர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், இளைஞர் செஞ்சிலுவை சங்க மாணவர்கள் திரளாக இரத்ததானம் கொடை அளித்தனர். தருமபுரி அரசு மருத்துவமனையில் தலசீமியா பாதிக்கப்பட்ட குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், அறுவை சிகிச்சை செய்வோருக்கு இரத்த தேவை அதிகமாக தேவைப்படுகிறது. உயிர் காக்கும் பணியில் தங்கள் பங்களிப்பு இருக்க மாணவர்கள், பேராசிரியர்கள் இரத்ததானம் கொடை வழங்கினர். இந்த முகாமிற்கு கல்லூரி தாளாளர் மதிப்புறு முனைவர் கோவிந்தா அய்யா அவர்கள் தலைமை தாங்கினார், குருதி வங்கி மருத்துவர் ப்ரியா, கல்லூரி முதல்வர் முனைவர் பரஞ்ஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் சதீஸ் குமார், பெருமாள் மற்றும் இளைஞர் செஞ்சிலுவை சங்க அலுவலர் திருவாசகம் ஆகியோர் முகாமை ஒருங்கிணைத்தனர். இரத்ததானம் அளிப்போம் பிறர் உயிரைக் காப்போம்.