கிரைன்ஸ் வலைதளத்தில்விவரங்களை பதிவு செய்ய விவசாயிகளுக்கு அழைப்புதளி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் திரு.சி.முருகன் அவர்கள் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:மத்திய மாநில அரசுகள் விசாயிகளின் நலனுக்காக பல்வேறு நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக வேளாண்மை அடுக்கு என்ற திட்டத்தை செயல்படுத்த உள்ளது. வருவாய் பேரிடர் மேலாண்மை துறை, தோட்டக்கலை துறை உள்ளிட்ட 13 துறைகளில், விவசாயிகளுக்கான அனைத்து திட்டங்களும் கிடைத்திட செய்யும் நோக்கத்தில் குரோவர் ஆன்லைன் ரிஜிஸ்ட்ரேசன் ஆப் அக்ரிகல்சுரல் இன்புட் சிஸ்டம் என்ற வலைதளத்தில் விவசாயிகளின் விவரங்கள், நில விவரம் உள்ளிட்டவை சரி பார்க்கப்பட்டு வலை தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. அந்தந்த கிராமங்களில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்கள், இப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். எனவே விவசாயிகள் தங்களது நில உடமை ஆவணம், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றுடன் கிராம நிர்வாக அலுவலரை தொடர்பு கொண்டு விவரங்களை பதிவு செய்து கொள்ளவும்.மேலும் விவரங்களுக்கு திரு.பெ.கண்ணன்தசரூபன், (உதவி வேளாண்மை அலுவலர், பெரிய ஆவேரிப்பள்ளி – 9443718250) திரு.மு.அரிகுமார், (உதவி வேளாண்மை அலுவலர், தோகரை அக்ரஹாரம் – 9865708173 ) திரு.எ.விக்கிரமாதித்தன், (உதவி வேளாண்மை அலுவலர், நந்திமங்கலம் 9698777080) திரு.கு.கோவிந்தராஜன், (உதவி வேளாண்மை அலுவலர், கோலட்டி- 7806896640) திரு.கா.ஜெயம், (உதவி வேளாண்மை அலுவலர், தொட்டமஞ்சி – 6381727249) மேற்கண்ட அலுவலர்களை தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு கூறினார்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.