*வினாடி வினா போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா* கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த பாவக்கல் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் மாவட்ட அளவில் நடைபெற்ற வினாடி வினா போட்டியில் முதலிடம் பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதிபெற்று சாதனை படைத்துள்ளனர். அரசு சார்பில் வினாடி வினா (தேன்சிட்டு) போட்டி தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கிடையே நடைபெற்றது. இதில் கிருஷ்ணகிரி மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டியில் பாவக்கல் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். தனித்தனி பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டியில் 32 மாணவர்களில் பாவக்கல் மேல்நிலைப்பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவி வே.காவியா மற்றும் எட்டாம் வகுப்பு மாணவன் நீ.மனோ முதலிடம் பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதிபெற்று சாதனை படைத்துள்ளனர். இவர்களை பாராட்டும் வகையில் பள்ளி தலைமையாசிரியர் பாக்கியநாதன் முன்னிலையில் நடைபெற்றது. பாராட்டு விழாவில் ஆசிரியர்கள் சாயிரா பானு, தமிழ்செல்வி, கணேசன், சிற்றரசு பகுதி நேர ஓவிய ஆசிரியர் குணசேகரன், பாலசந்தர், கற்பகம், ஏழுமலை, விஜயகாந்த் மற்றும் வட்டார வளமைய அலுவலர் வசந்தி, பிரபு ஆகியோர் மாணவர்களை பாராட்டினார். மாணவர்களின் பெற்றோர்கள் உடன் இருந்தனர். தொடர்ச்சியாக அரசு நடத்தும் போட்டிகளில் பாவங்கல் பள்ளி மாணவ மாணவிகள் வெற்றி பெற்று வருவது பெருமைக்குரியது. மாணவர்களும், ஆசிரியர்களும் இதற்காக உழைப்பது பாராட்டுக்குரியது என்று தலைமையாசிரியர் பாராட்டி பேசினார்.