தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம் ஏ.ஜெட்டிஅள்ளி ஊராட்சி அவ்வைநகரில் அமைந்துள்ள அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் பள்ளியை ஆய்வு செய்து பார்வையிட்டார். அப்பொழுது மாணவ, மாணவியர்கள் தரையில் அமர்ந்து கல்வி பயிலுவதை கண்டார். உடனடியாக சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்ட நிதியில் இருந்து ரூபாய் 6.00 இலட்சம் மதிப்பீட்டில் பள்ளி மாணவ, மாணவிகள் அமர்ந்து கல்வி பயிலும் வகையில் டெஸ்க்,பென்ச் வழங்குதாக தெரிவித்தார். அதனடிப்படையில் இன்று அப்பள்ளிக்கு மேற்கண்ட தளவாட பொருட்களை வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், பள்ளியின் தலைமை ஆசிரியர் ஸ்டெல்லாமேரி, மாநில செயற்குழு உறுப்பினர் பெ.பெரியசாமி, மாவட்ட பொறுப்பாளர் இ.மா.பாலகிருஷ்ணன், மாவட்ட தொழிற்சங்க செயலாளர் மின்சாரம் சின்னசாமி, ஒன்றிய கவுன்சிலர் சோனியாகாந்திவெங்கடேசன், ஒன்றிய செயலாளர் ஒ.கே.கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் கவுன்சிலர்கள் பரமேஷ்வரிமுத்து, ஒ.கே.எஸ்.குமார், மாவட்ட இளைஞர் சங்க துணை செயலாளர் என்.சின்னசாமி, பசுமைத் தாயக மாவட்ட துணை செயலாளர் தமிழரசன், நிர்வாகிகள் கண்ணதாசன், சக்தி, மோகன், மணி மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.
krishnagiri
கிருஷ்ணகிரி சாந்தி திருமண மண்டபத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு சார்பாக மாவட்ட அளவிலான மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் உற்பத்தி பொருட்கள் விற்பனை கட்டாய கண்காட்சி 20.03.2023 முதல் 25.03.2023 வரை நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தீபக் ஜேக்கப் இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு சார்பாக மகளிர் சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை சந்தைப்படுத்தவும், தொடர் சந்தை வாய்ப்புகளை உருவாக்கவும் மாவட்ட அளவில் கிருஷ்ணகிரி ராயப்பா முதலி தெருவில் உள்ள சாந்தி திருமண மண்டபத்தில் 20.03.2023 முதல் 25.03.2023 வரை கட்டாய கண்காட்சி (Mandatory Exhibition) நடைபெறுகிறது.
இக்கண்காட்சியில் மகளிர் சுய உதவிக் குழு உதவிக் குழு உறுப்பினர்கள் தயாரிக்கும் பொருட்களான மென் பொம்மைகள், டெரகோட்டா பொம்மைகள், மண்பாண்ட பொருட்கள், புளி, ஊறுகாய், பாக்கு மட்டை தட்டுகள், பாசிமணி, புடவைகள், காட்டன் சுடிதார்ஸ், அலங்கார மலர்மாலைகள், நவநாகரீக அணிகலன்கள், தின்பண்டங்கள், பனைவெல்லம், ஹேண்ட் பேக்குகள், கிப்ட் பொருட்கள், நர்சரி பூ செடிகள், கால் மிதியடிகள், சிறுதானிய உணவு பொருட்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் ஆகியவை விற்பனைக்கு வைக்கப்படுகிறது.
மேற்படி கண்காட்சி 20.03.2023 முதல் நடைபெற உள்ளது. பொதுமக்கள் அனைவரும் கண்காட்சியை பார்வையிட்டு பொருட்களை வாங்கி பயனடையலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தீபக் ஜேக்கப் இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்க இன்று (18-03-2023 சனிக்கிழமை) சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் அறிக்கை
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவிற்கிணங்க, ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் 1.08.2022 முதல் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்பணி இம்மாவட்டத்தில் தற்போது 77% சதவீதம் முடிவடைந்துள்ளது. இப்பணியினை துரிதப்படுத்தும் நோக்கில் 18.03.2023 (சனிக்கிழமை) அன்று நமது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிறப்பு முகாம் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட தேதியில் அனைத்து வாக்குசாவடி நிலை அலுவலர்களும் வீடுவீடாக சென்று களப்பணி மேற்கொண்டு வாக்காளர்களிடம் ஆதார் எண்ணை பெற்று 6B படிவம் மற்றும் GARUDA App மூலம் உள்ளீடு செய்யும் பணி மேற்கொள்வார்கள். அலுவலர்கள் இப்பணி தொடர்பாக படிவம் 6B சேகரிக்கும் போது பொதுமக்கள் ஒத்துழைப்பு தருமாறும், வாய்ப்பினை பயன்படுத்தி வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைத்து பயனடையும்மாறு தெரிவிக்கப்படுகிறது.
மேலும், பொதுமக்கள் கீழ்காணும் இணைய வழிகள் மூலம் தங்கள் வீடுகளிலிருந்தே பெற elector – facing portals / Apps like NVSP, VHA ஆகியவற்றின் மூலம் இணைய வழியில் (online) வாக்காளர்களே நேரடியாக இணைக்கலாம். இணைக்க முடியாதவர்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் (BLO) GARUDA App அல்லது படிவம் 6B-ஐ சமர்ப்பித்து வாக்காளர்கள் தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் பதிவு செய்து கொள்ளலாம். இது தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் 1950 என்ற இலவச உதவி எண்ணை தொடர்பு கொண்டு கூடுதல் விவரங்கள் பெறலாம். மேற்கண்ட தேர்தல் ஆணையத்தின் சேவைகளை தவறாமல் பயன்படுத்தி கொள்ளலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தீபக் ஜேக்கப் இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநில கோலார் மாவட்டத்தின் யார்கோல் அணை நிரம்பி வழிவதை அடுத்து அம்மாவாட்ட முக்கிய அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தின் யார்கோல் அணை நிரம்பி வழிவதை அடுத்து அம்மாவாட்ட முக்கிய அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் உள்ள யார்கோல் கிராமத்தில் மார்க்கண்டேய ஆற்றின் குறுக்கே யார்கோல் அணை அமைந்துள்ளது. பங்கார்பேட்டை, மாலூர், கோலார் நகரங்கள் மற்றும் வழியில் உள்ள 45 கிராமங்களுக்கு குடிநீர் வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கம்.திட்டமானது 414 மீ நீளம் மற்றும் அதிகபட்சமாக 40 மீ உயரம் கொண்ட கான்கிரீட் புவியீர்ப்பு அணையை உள்ளடக்கியது. அணையின் மொத்த சேமிப்பு கொள்ளளவு 500 மில்லியன் கன அடி நீர். இந்நிலையில் கடந்த சில தினங்களில் பெய்த தொடர் மழை காரணமாக அணையின் மொத்தா கொள்ளாவும் நிரம்பியது.அணைலிருந்து வெளியேறும் உபரி நீர் மார்க்கண்டயே நதியின் தமிழக எல்லையான தீர்த்தம், தரணிசந்திரம், சின்ன கொத்தூர், நெடுசாலை,மாரசந்திரம்,எண்ணெக்கொள் வழியாக சென்று தென் பெண்ணை ஆற்றில் கலந்து கிருஷ்ணகிரி அணைக்கு வந்து சேர்கிறது.
இந்நிலையில் கோலார் மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களும், மற்றும் மேலவை உறுப்பினர்களும், அமைச்சர்களும் கலந்து கொண்டு அணையை ஆய்வு செய்த பின்னர் அப்பகுதி பொதுமக்கள் மேல தாளத்துடன், கும்ப மரியாதை செலுத்தி அணைக்கு மலர் தூவி பூஜை செய்து வழிப்பட்டனர்.பின்னர் விழாவை முடித்து சென்ற கோலர் மாவட்ட மேலவை உறுப்பினர் திரு முனிசாமி ஸ்ரீ எஸ் அவர்கள் அணையை பார்வையிட வந்த பொதுமக்களிடை போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொண்டர். பின்பு அவரே கீழே இரங்கி அங்கிருந்த போக்குவரத்து நெரிசலை சரிசெய்த பின்னர் அங்கிருந்து புறப்பட்டார்.அணையை பார்வையிட வந்த பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. எனவே அம்மாவட்டத்தின் புதிய சுற்றுள்ளா தளமகா யார்கோல் அணை உருவெடுத்துள்ளது.
வேப்பனப்பள்ளி செய்தியாளர் மகேந்திரன்
ஓசூர் மத்திகிரி நான்கு வழிச்சாலையில் உள்ள கனிகா மஹால் திருமண மண்டபத்தில் இளைஞர அணி நிர்வாகிகள் அறிமுக கூட்டம் பாரதிய ஜனதா கட்சி கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தலைவர் எம் நாகராஜ் அவர்கள் ஆலோசனைப்படி ஒசூர் மாநகராட்சி தெற்கு இளைஞர அணி நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடைபெற்றது இந்த நிகழ்ச்சிக்கு தலைமை பொறுப்பேற்றவர் ஒன்றிய தலைவர் சாய்தேவ அவர்கள் முன்னிலை வகித்தவர் இளைஞரணி மாவட்ட பொதுச் செயலாளர் கோவர்தன் வரவேற்புரை இளைஞர் அணி மாவட்ட செயலாளர் முரளி நன்றி உரை ஒன்றிய பொதுச் செயலாளர் அபிஷேக் சிறப்பு விருந்தினராக இளைஞர் அணி மாவட்ட தலைவர் முரளி ஞானசேகரன் மாநில செயற்குழு உறுப்பினர் கிஷோர் மாவட்ட பொருளாளர் சீனிவாஸ் மகளிர் அணி தலைவி .மஞ்சுளா மண்டல் பொதுச் செயலாளர் திரு.வீரேந்திர மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர் இந்த நிகழ்ச்சியில் வருகின்ற 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இளைஞர அணி சார்பில் சிறப்பாக கொண்டாடிட வேண்டும் என்று இந்த இளைஞர அணி கூட்டத்தில் ஆலோசனை நடைபெற்றது.
கலைஞரின் 4-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் திமுக அமைதி பேரணி
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 4-வது நினைவு தினத்தையொட்டி நகர திமுக சார்பில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மௌன ஊர்வலம்
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞரின் 4 ம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு அவரது திருஉருவபடத்திற்கு மாலை அணிவித்து மரியாதை
பருகூர் பேரூராட்சி திமுக சார்பில் கலைஞரின் 4 ம் ஆண்டு நினைவுநாளையொட்டி அவரது திருஉருவபடத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை
கலைஞரின் 4-ஆம் ஆண்டு நினைவு நாள்
கிருஷ்ணகிரியில் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நான்காவது நினைவு தினத்தையொட்டி திமுக சார்பில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மௌன ஊர்வலம் நடைபெற்றது. கிருஷ்ணகிரி நகரில் தமிழ்நாடு அரசு வீட்டுவசதி வாரிய பழைய குடியிருப்பில் இருந்து தொடங்கிய பேரணிக்கு நகர்மன்றத் தலைவர் எஸ்.கே. நவாப் தலைமை வகித்தார். புறநகர் பேருந்து நிலையத்தை அடுத்து உள்ள அண்ணா சிலை அருகே இந்த ஊர்வலம் நிறைவு பெற்றது. அங்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப்படத்திற்கு கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் டி. செங்குட்டுவன், மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில், கிருஷ்ணகிரி நகர்மன்றத் தலைவர் பரிதா நவாப், நகரமன்ற உறுப்பினர்கள், கட்சியின் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள், தொண்டர்கள், பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞரணி திமுக சார்பாக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பி.எஸ்.சீனிவாசன் தலைமையில் கலைஞரின் திருஉருவபடத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் சூளகிரி தெற்கு ஒன்றிய திமுக சார்பாக ஒன்றிய செயலாளர் கே.சி.பாக்யராஜ் தலைமையில் சூளகிரியில் கலைஞரின் திருஉருவபடத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை சேர்மென் ஷேக்ரசீத், முன்னாள் சேர்மென் அருணா பூசன்குமார், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பி.எஸ்.சீனிவாசன், வீராரெட்டி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மாவட்ட கழகச் செயலாளரும் ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் ஒய் பிரகாஷ் எம்எல்ஏ அவர்களின் ஆணைப்படி கெலமங்கலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜி. எம்.சின்னராஜ் தலைமையில் ராயக்கோட்டை பேருந்து நிலையத்தில் இருந்து ஊர்வலமாக சென்று அண்ணா சிலை அருகில் வைக்கப்பட்டிருந்த கலைஞர் அவர்களின் திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் மாவட்ட துணை அமைப்பாளர்களான எம்.பி.பெரியசாமி மற்றும் வி.சி.குமரேசன், ஆர்.சந்திரன் மற்றும் முன்னாள் ஒன்றிய செயலாளர்கள் டி.எம். அரியப்பன், எம் கணேசன் ஒன்றிய அவைத்தலைவர் எல் ஆர் ஜெயராமன் மற்றும் முன்னாள் நகர செயலாளர் கே என் நாகராஜ் ஒன்றிய துணை செயலாளர்கள் திருமுருகன், குணசேகரன் மற்றும் ஒன்றிய பிரதிநிதிகள் சிவகுமார், ரஜினி, முரளி ஒன்றிய பொருளாளர் முருகன் முன்னாள் ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் சண்முகம், மாரிமுத்து மற்றும் ஒன்றிய மீனவரணி அமைப்பாளர் கணேசன் மற்றும் ஆத்மா திட்டத்தின் இயக்குனர்கள் மாதேஷ் , கிருஷ்ணமூர்த்தி மற்றும் ராயக்கோட்டை கிளை நிர்வாகிகள் கிருஷ்ணன் கி. கோபால், நந்தகுமார், ஐய்யப்பன், மஞ்சூ, எஸ் டி டி கிருஷ்ணன் மற்றும் பழையூர் மூர்த்தி மற்றும் கொப்பக்கரை கிளை நிர்வாகிகள் பழனி புலி என்கிற கோவிந்தராஜ் மற்றும் முனிராஜ் பால் கிருஷ்ணன் மற்றும் வெப்பாலம் பட்டி நஞ்சுண்டன் உள்ளட்டி கிளை நிர்வாகிகள் முனிராஜ் மற்றும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர்கள் கோவிந்தராஜ், பாசில் மற்றும் குருபரப்பள்ளி கிளை செயலாளர் ஜெயப்பன் நாக துணை முனிராஜ் உள்ளுறுக்கை கிளை நிர்வாகிகள் மேஸ்திரி ராஜா மற்றும் அஸ்லாம் பாய் மற்றும் சஞ்சலப்பட்டி கோவிந்தராஜ் பால்லாம்பட்டி முனிராஜ் மற்றும் 10 ஊராட்சிகளின் கழக உடன்பிறப்புகள் மற்றும் கழக மூத்த முன்னோடிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் வேப்பனப்பள்ளியில் தமிழினத் தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களின் 4ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக துணை செயலாளரும் வேப்பனபள்ளியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பி.முருகன் கலைஞரின் திருஉருவபடத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஒன்றிய செயலாளர் ரகுநாத் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் மாவட்ட அணிகளின் அமைப்பார்கள் துணை அமைப்பாளர்கள். ஒன்றிய அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டு தலைவருடைய திருவுரவ படத்திற்கு மாலை அணிவித்து அன்னதானம் வழங்கினர்.
தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பேரூராட்சி அலுவலகம் முன்பு திமுக கட்சினர் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் மு . கருணாநிதிக்கு 4.ம் ஆண்டு நினைவஞ்சலி அனுசரிப்பு நடைபெற்றது. இதில் பாப்பாரப்பட்டி நகர செயலாளர் சண்முகம் தலைமை தாங்கி நடத்தி வைத்தார். அவை தலைவர் விஜய் ஆனந். பொருளாளர் தர்மலிங்கம். மாவட்ட பிரதிநிதி திருவேங்கடம். குமரன் ஆகியோர் மறைந்த கருணாநிதி அவர்களின் திருஉருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
மத்தூரில் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் கலைஞரின் 4 ம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு அவரது திருஉருவபடத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதையடுத்து ஒன்றிய செயலாளர்கள் குண.வசந்தராசு, கே.ஆர்.கே.நரசிம்மன் ஆகியோர் தலைமையில் அமைதி பேரணி நடைபெற்றது. நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்துகொண்டனர்
மாரண்டஅள்ளி பேரூர் கழகம் சார்பில் கலைஞர் கருணாநிதி அவர்களின் 4 -ஆம் ஆண்டு நினைவஞ்சலியோட்டி மாரண்டள்ளியில் உள்ள 15 வார்டு கிளைக் கழகங்களிலும் கலைஞரின் திரு உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தி விட்டு மாரண்டஅள்ளி முக்கிய வீதிகளின் வழியாக பாலக்கோடு வடக்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன் தலைமையிலும், பேரூர் கழகச் செயலாளரும், பேரூராட்சி தலைவருமான வெங்கடேசன் முன்னிலையிலும் அமைதிப் பேரணி நடைபெற்றது. முதலில் இபி காலனியில் தொடங்கிய ஊர்வலமானது 4 -ரோடு வழியாக பேருந்து நிலையம் மற்றும் பைபாஸ் ரோடு -மெயின் ரோடு வழியாக தேதி பேரணி நடைபெற்றது இந்த அமைதி பேரணையின் போது நூற்றுக்கணக்கான கட்சியினர் கலந்து கொண்டனர். மேலும் பேரூராட்சி துணைத் தலைவர் கார்த்திகா பன்னீர்செல்வம் ,பேரூராட்சி கவுன்சிலர்கள் கீதா வடிவேல், லட்சுமி முனிராஜ்,யதிந்தர், கார்த்திகேயன் ரீனா வேலு, அபிராமி காந்தி, சத்யா சிவகுமார், வெங்கடேசன், வசந்தி ரமேஷ், அவைத்தலைவர் செங்கல் மணி, துணைத் தலைவர் மாதையன், பொருளாளர் ஆறுமுகம், மாவட்ட பிரதிநிதிகள் பன்னீர் செல்வம், சுரேஷ், சாமனூர் ஊர் கவுண்டர் குமார், ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன், கவுன்சிலர் ராஜா, மாணவரணி மணிவண்ணன், வழக்கறிஞர் வடிவேல்,பஞ்சப்பள்ளி சாதப்பன், ஜானி,மாது, சிவக்குமார் மல்லாபுரம் கோவிந்தசாமி, இளைஞரணி செந்தில்,தளபதி மற்றும் பேரூர் கழக நிர்வாகிகள், 15 வார்டு கிளைச் செயலாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பாலக்கோடு பேரூர் கழக திமுக சார்பில் பேரூர் கழகச் செயலாளரும், தலைமைச் செயற்குழு உறுப்பினருமான பேரூராட்சி தலைவர் முரளி அவர்கள் தலைமையில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாளை பாலக்கோட்டில் உள்ள 18 வார்டு கிளைகளிலும் அவரது திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பிறகு பாலக்கோடு முக்கிய வீதிகளின் வழியாக அமைதிப் பேரணி நடைபெற்றது.முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பாலக்கோடு பேரூர் கழக திமுக சார்பில் நடைபெற்ற அமைதிப் பேரணியானது பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகம் அருகே தொடங்கி பாலக்கோடு ஓசூர் சாலையில் வழியாக மகாத்மா காந்தி சாலை வரை நடந்த அமைதிப் பேரணியில் 200க்கும் மேற்பட்ட திமுகவினர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைமை வழக்கறிஞர் முருகன்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம், மாவட்ட கவுன்சிலர் தீபாமுருகன்,ஓன்றிய கவுன்சிலர்கள்,அழகுசிங்கம்,ராஜாமணி,முத்துசாமி,ஊராட்சி மன்ற தலைவர்,ஆனந்தன்,முன்னாள் ஒன்றிய குழு து.தலைவர் நாகராஜ்,வழக்கறிஞர் இளவரசன்,கிரஷர் முனியப்பன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் ஆனந்தன், இளைஞர் அணி இதாயத்துல்லா, மற்றும் பாலக்கோடு பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டம் கெலமங்கலம் பேருந்து நிலையத்தில் முன்னாள் தமிழக முதலமைச்சர் முத்தமிழர் கலைஞர் அவர்கள் நினைவு நாள் மௌன அஞ்சலி கூட்டம் நடைபெற்றது கலைஞர் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினார்கள் இந்த நிகழ்ச்சிக்கு தலைமை பொறுப்பேற்றவர்கெலமங்கலம் நகரச் செயலாளர் தஸ்திகீர் முன்னிலை வகித்தவர் ஒன்றிய செயலாளர் ஸ்ரீதர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் மாவட்ட பிரதிநிதிகள் அலெக்ஸ் உமா சுரேஷ் நகர துணை செயலாளர்கள் ஹரி ரேகா (எ)ஆஷாபி சுரேஷ் நகர பொருளாளர் ஆனந்த்ஐயா ஒன்றிய பிரதிநிதி சான்பாஷா செயற்குழு உறுப்பினர் அப்துல் காதர் கெலமங்கலம் ஒன்றிய 12 வது வார்டு கவுன்சிலர் மாரப்பா(எ) ராங்கப்பா திமுக கட்சி பிரதிநிதி சனாவுல்லா கோவிந்தராஜ் மற்றும் ரமேஷ் சாதிக் மற்றும் ஏராளமான திமுக கட்சி பிரதிநிதிகள் தொண்டர்கள் ஊர் பொதுமக்கள் உடனிஇருந்தன
சூளகிரி தெற்கு ஒன்றியம் உத்தனப்பள்ளி கிராமத்தில் கலைஞரின் நான்காம் ஆண்டு நினைவஞ்சலி முன்னிட்டு திரு .கலைஞர் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி, மாலை அணிவித்து மரியாதை செலுத்திய போது எடுத்த படம் இதில் பி. வெங்கடேஷ் சூளகிரி தெற்கு முன்னாள ஒன்றிய செயலாளர் தலைமை தாங்கினார் மற்றும் கலக பிராமுகர் N.பாலசுப்பிரமணி ,கூட்டுறவு வங்கி தலைவர் சேகர்,k.m.ஆனந்த் மாவட்ட பிரதிநிதி ,பாபு கிளை கழக செயலாளர் ,வாசு கிளைக் கழகச் செயலாளர், கவுஸ் பாய் ,நஞ்சுண்டப்பா ,செந்தில் ,கோவிந்தப்பா PTA தலைவர் ,லட்சுமய்ய கவுடு ,விஜி ,ஆகியோர் கலந்து கொண்டனர்
ஊத்தங்கரை ஒன்றியத்தில், பல்வேறு இடங்களில் தி.மு.க., சார்பில், மறைந்த மாஜி.,முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நான்காம் ஆண்டு, நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.நிகழ்ச்சிக்கு, ஒன்றிய செயலாளர்கள் தெற்கு ரஜினி செல்வம்,மத்திய எக்கூர் செல்வம்,வடக்கு குமரேசன்,நகரசெயலாளர் பாபுசிவக்குமார் ஆகியோர் முன்னிலையில்,பீ.டீ.ஒ., ஆபீஸ் எதிரே, கருணாநிதியின் திருவுருவப்படத்திற்கு, மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர்.அங்கிருந்து பேருந்து நிலையம் வரை, அமைதி பேரணியாக வந்து, ஊத்தங்கரை ரவுன்டானாவில் உள்ள, பெரியார்,அண்ணா போன்ற திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவித்தனர்.ரவுன்டானாவில் வைக்கப்பட்ட, கருணாநிதி உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில், ஒன்றிய சேர்மேன் உஷாராணி,டவுன் பஞ்., தலைவர் அமானுல்லா,மாநில மகளிர் ஆனைய குழுஉறுப்பினர் மாலதி,மாஜி.,எம்.எல்.ஏ.,கிருஷ்ணமூர்த்தி, கவுன்சிலர் நிர்மலா,கதிர்வேலு மற்றும் தி.மு.க., நிர்வாகிகள் பலர் கலந்துக்கொண்டனர்.
பாலக்கோடு மாரண்டஅள்ளி அருகே சி.எம்.புதூரில் மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு அணி து.அமைப்பாளர் இராஜபார்ட் ரங்கதுரை அவர்கள் தலைமையில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவஞ்சலி அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட பிரதிநிதி ஜெகநாதன், காரிமங்கலம் மேற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஹரி பிரசாத்,வாசு,இராஜேந்திரன், மற்றும் கிளை செயலாளர்கள்,பொதுமக்கள், உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பாலக்கோடு வடக்கு ஒன்றியம், பஞ்சப்பள்ளி ஊராட்சி, பட்டாபி நகர் கிராமத்தில் உலக தமிழர்களின் ஒப்பற்ற தலைவர், பெரியார் கனவை நிறைவேற்றிய முத்தமிழ் அறிஞர் முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு நான்காம் ஆண்டு நினைவஞ்சலி அனுசரிக்கப்பட்டது.இதில் பஞ்சப்பள்ளி முன்னாள் ஊராட்சி செயலாளர் பாண்டுரங்கன் அவர்கள் கலைஞர் அவர்களின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார், இதில் ஜே.ஆர்.கிரைனட்ஸ் மேலாளர் சிங்காரவடிவேலன், பட்டாபி நகர் கிளை செயலாளர் இராஜகோபால், பஞ்சப்பள்ளி ஊராட்சி வார்டு கவுன்சிலர்கள்,சேகர், முனிரத்தினம், தொ.மு.ச.நிர்வாகிகள் மாரியப்பன், முனிராஜி, முன்னாள் ஒன்றிய பிரதிநிதி இராமச்சந்திரன் மற்றும் கிளை கழகம் முன்னோடிகள் .கருணாநிதி, கோ.சரவணன், தருமன், கமலநாதன், பாளையம் அருள் பிரகாஷ், ,கோவிந்நன், ,திம்மராஜி, ,அழகுசெட்டி, ,பெரியசாமி, மற்றும் ஏராளமான கழக தோழர்கள் கலந்து கொண்டனர்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 4-ஆம் ஆண்டு நினைவு நாள் ஆகஸ்ட்-7ல் அமைதிப் பேரணி கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக சார்பில் ஆகஸ்டு-7 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி அளவில் ஓசூர் தாலுகா அலுவலகம் செல்லும் சாலை அண்ணா சிலை எதிரில் இருந்து புறப்பட்டு ராம்நகர் அண்ணா சிலை வரை அமைதிப் பேரணியாக சென்று அங்கு வைக்கப்பட்டுள்ள கலைஞர் அவர்களின் திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்படுகிறது இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், மாநகர, ஒன்றிய, பேரூர் கழக செயலாளர்கள், நிர்வாகிகள், மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய, பேரூர் அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பகுதி செயலாளர், கிளை செயலாளர்கள், கழகத் தோழர்கள், மற்றும் பொதுமக்கள் இந்த அமைதிப் பேரணியில் கலந்து கொள்ளுமாறு கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளரும் ஓசூர் எம்.எல்.ஏ-வுமான ஒய்.பிரகாஷ்வேண்டுகோள் விடுத்துள்ளார்
பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புளியம்பட்டி மற்றும் வேலம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க விலையில்லா மிதிவண்டியினை பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் D.மதியழகன். அவர்கள் வழங்கினார்
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் வி. ஜெயச்சந்திர பானு ரெட்டி அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்
கிருஷ்ணகிரி மாவட்ட புதிய பேருந்து நிலையத்தில் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் உணவு திருவிழா வை முன்னிட்டு நடைபெற்ற வாக்கத்தான் பேரணியை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் வி. ஜெயச்சந்திர பானு ரெட்டி அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் சதீஷ்குமார் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்
வெங்கடேசன் துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் கோவிந்தன் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் அமீர் பாஷா வட்டாட்சியர் நீலமேகம் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் முத்துமாரியம்மன் ரமேஷ் ரமேஷ் ராஜசேகர் நாகேஸ்வரன் பழனிச்சாமி ராஜேஷ் முத்துக்குமார் உள்ளிட்ட பள்ளிக்கல்வித்துறை விளையாட்டுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்