மத்தூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி என்ஜினிரிங் மாணவர் சாவு:
மத்தூர், பிப்.10-
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள கண்ண்டஹள்ளி பகுதியை சேர்ந்த சென்னையன் இவரது மகன் சதீஸ் வயது 24 இவர். பி.இ. படித்துள்ளார். இவரும் அதே பகுதியை சேர்ந்த பரணி வயது 24, அருண் வயது 25 ஆகிய மூவரும் ஒரே இருசக்கர வாகனத்தில் கணணன் டஅள்ளி பகுதியில் இருந்து மத்தூருக்கு வந்துள்ளனர். மீண்டும் மத்தூரில் இருந்து மூவரும் கண்ணன்டஅள்ளி பகுதிக்கு சென்ற போது பெங்களுரு ,திருவண்ணா மலை தேசிய நெடுஞ்சா லையான தனியார் பள்ளி அருகே சதீஸ், அருண், பரணி ஆகியோர் சென்ற இரு சக்கர வாகனத்தின் மீது இரவு 8 -30 மணியளவில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மூவரும் தூக்கி வீசப்பட்டதில் படுகாயமடைந்த சதீஸ் சம்பவ இடத்தில் இறந்து விடுகின்றார். அதே போல் அருண், பரணி ஆகிய இருவரையும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சை காக பெங்களுரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப் Uட்டுள்ளனர். தகவலறிந்த மத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீஸார் விரைந்து சென்று விபத்தில் இறந்த சதீஸின் உடலை கைபற்றி மத்தூர் அரசு மருத்துவ மனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு விசாரித்து வருகின்றனர்.