இன்று தமிழக முதல்வர் தளபதியார் அறிவித்தபடி விவசாய நகை கடன் தள்ளுபடியை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஒன்றியம், அலேக்கோட்டா தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் விவசாய பயனாளிகளுக்கு தங்கள் அடகு வைத்த நகைகளை திருப்பி வழங்கும் நிகழ்ச்சியை கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் திரு.பி.எஸ்.சீனிவாசன் அவர்கள் துவக்கி வைத்தார். உடன் ஒன்றிய செயலாளர் பி.வெங்கடேஷ், தலைமை செயற்குழு உறுப்பினர் வீராரெட்டி, பீர்ஜேப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணி, துப்புக்கானபள்ளி ஊராட்சி மன்ற தலைவர் ராதாகிருஷ்ணன், மாணவரணி ராமமூர்த்தி, ITWING கார்த்தி மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்…