ஒசூர் சட்டமன்ற தொகுதி ஒசூர் மாநகராட்சி அந்திவாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் 2021-2022 சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை திட்டத்தின் கீழ் சுமார் ரூ.5.36 இலட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்படவுள்ள சமையலறைக் கட்டிடத்திற்கு மாவட்ட செயலாளரும் ஒசூர் சட்டமன்ற உறுப்பினருமான ஒய்.பிரகாஷ் எம்எல்ஏ, ஓசூர் மாநகர பொறுப்பாளரும் மேயருமான எஸ்.ஏ.சத்யா பூமிபூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தனர்.
மாநகர துணை மேயர் ஆனந்தய்யா, மாமன்ற உறுப்பினர்கள் சென்னீரப்பா, மம்தாசந்தோஷ், ஒன்றிய குழு உறுப்பினர் ரமேஷ், பாக்கியலட்சுமி, மாவட்ட தொ.மு.ச கோபாலகிருஷ்ணன், அந்திவாடி நாகராஜ், அரசு அதிகாரிகள், தலைமை ஆசிரியர், இருபால் ஆசிரியர்கள், வார்டு செயலாளர்கள், கழக தோழர்கள், மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.