செப்டம்பர் 15 பேரறிஞர் அண்ணா அவர்கள் 114 வது பிறந்த நாளை முன்னிட்டு ஒசூர் தாலுகா அலுவலகம் செல்லும் சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவ சிலைக்கு மாவட்ட செயலாளர் ஒசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ்MLA மற்றும் மாநகர செயலாளரும் மேயருமான எஸ்.ஏ.சத்யாEx.MLA மாலை அணிவித்து, பொதுமக்களுக்கும, கழக தோழர்களுக்கும் இனிப்புகள் வழங்கினர். உடன் மாநகர துணை மேயர் ஆனந்தய்யா, மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ், துணை செயலாளர்கள் சீனிவாசன், தனலட்சுமி, தலைமை செயற்குழு உறுப்பினர் சுகுமாரன், பகுதி செயலாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மாநகர நிர்வாகிகள், மகளிரணி நிர்வாகிகள், வார்டு செயலாளர்கள், கழக தோழர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.