இன்று கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் பர்கூர் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட அஞ்சூர் பஞ்சாயத்து செந்தாரப்பள்ளி கிராமத்தில் அரசு நியாயவிலை கடை மற்றும் குடிநீர் மேல் தேக்க தொட்டி மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் தே.மதியழகன் எம்எல்ஏ அவர்கள் துவக்கி வைத்தார்.
மாவட்ட துணை செயலாளர், கோவிந்தசாமி தலைமை செயற்கு ழு உறுப்பினர்கள் வி. செந்தில், ஜே.கே. கிருபாகரன், பொதுக்குழு உறுப்பினர்கள் ஏ.சி. நாகராஜன், டி.பாலன், பர்கூர் தெற்கு ஒன்றிய செயலாளர் அறிஞர், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் டி.சி.ஆர். தினேஷ், பாலாஜி, மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் லட்சுமி தேவராஜ், ஆனந்தூர் கிளை செயலாளர் காந்தன், மாவட்ட பிரதிநிதி தாமோதரன், ஊராட்சி மன்ற தலைவர் சுகுணா வெங்கடேசன், தேவராஜ், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அஞ்சூர் கிளை செயலாளர் ஏ சி கண்ணயன், ஒன்றிய மாணவரணி துணை அமைப்பாளர் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.