கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் துறை நிறுவனங்களும் -தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள வேலைநாடுநர்களும் கலந்து கொள்ளும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 2104.2023 அன்று நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் திருதீபக் ஜேக்கப் இஆப, அவர்கள் தகவல்.
கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஒவ்வொரு மாதமும் மாதத்தின் மூன்றாம் வெள்ளிக்கிழமை அன்று சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இம்மாதம் மூன்றாம் வெள்ளிக்கிழமையான 21042023 அன்று காலை 10.00 மணி அளவில் இவ்வலுவலகத்தில் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இது ஒரு இலவச பணியே ஆகும். இதனால் தங்களுடைய வேலைவாய்ப்பு பதிவு இரத்து செய்யப்படமாட்டாது.
இம்முகாமில் கிருஷ்ணகிரி மற்றும் ஓசூரை சேர்ந்த தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்திற்கு தகுதி உள்ள வேலைநாடுநர்களை தேர்வு செய்ய உள்ளனர். இதில் SSLC, HSC ITI DIPLOMA மற்றும் பட்டப்படிப்பு படித்தவர்கள் தங்களுடைய சுயவிவரத்துடன் (BIO.DATA) கலந்து கொண்டு பயனடையலாம் என
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருதீபக் ஜேக்கப் இஆப., அவர்கள்
தெரிவித்துள்ளார்.