Home » கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு பெறாத குடும்ப அட்டைதாரர்கள் நாளை (17-01-2022 ) பெற்றுக்கொள்ளலாம் மண்டல இணைப்பதிவாளர் அறிக்கை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு பெறாத குடும்ப அட்டைதாரர்கள் நாளை (17-01-2022 ) பெற்றுக்கொள்ளலாம் மண்டல இணைப்பதிவாளர் அறிக்கை

by Babukanth V
0 comment

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு பெறாத குடும்ப அட்டைதாரர்கள் நாளை பெற்றுக்கொள்ளலாம் மண்டல இணைப்பதிவாளர் அறிக்கை

கிருஷ்ணகிரி, ஜன.17

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை பொங்கல் பரிசு தொகுப்பு பெறாத குடும்ப அட்டைதாரர்கள் நாளை17.01.2022 காலை 7 மணி முதல் ரேஷன் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம், நாளை ரேஷன் கடைகளுக்கு வேளை நாட்களாகும் என மண்டல இணைப்பதிவாளர் ஏகாம்பரம் அவர்கள் தெரிவித்துள்ளார். தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசு தொகுப்புகளை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் வெளியூரில் இருந்த குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் கடந்த வாரம் பொங்கல் பரிசு தொகுப்பினை பெற இயலாத குடும்ப அட்டை தாரர்கள் நாளை ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பின்ன பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

error: Content is protected !!