தமிழகமெங்கும் மரபு சந்தைகள் துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இயற்கை விவசாய முறையில் விளைவிக்கப்படும் பொருட்களை விவசாயிகளே நேரிடையாக விற்பனை செய்கின்றனர். பல்வேறு அரிசி வகைகள், தானிய வகைகள், பழங்கள், காய்கறிகள், கீரை வகைகள், நாட்டுக்கோழி, முட்டைகள், மூலிகை பொருட்கள், மர செக்கு எண்னைகள், என பலதரப்பட்ட பொருட்கள் கிடைக்கும் இந்த மரபு சந்தை இப்பொழுது கிருஷ்ணகிரியில் ஆரம்பித்துள்ளார்கள். கிருஷ்ணகிரி ராயகோட்டை ரோடு புதிய வீட்டு வசதி வாரியம் முதல் பகுதியில் உள்ள பி.ஆர்.சி.பள்ளி அருகே உள்ள மைதானத்தில் நடைபெறுகிறது. விவசாயிகளுக்கு ஆதரவு கொடுத்து ஆரோக்கிய உணவு பொருட்களை வாங்கி பயனடையுங்கள்