Home » ஜூன் மூன்றாவது வாரத்தில் 29-வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி நடைபெறுகிறது ! அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் டிஆர்ஒ ஆர்.ராஜேஸ்வரி ஆய்வு

ஜூன் மூன்றாவது வாரத்தில் 29-வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி நடைபெறுகிறது ! அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் டிஆர்ஒ ஆர்.ராஜேஸ்வரி ஆய்வு

by Babukanth V
0 comment

கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில், ஜூன் 3-வது வாரத்தில் 29 -வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி விழா நடைபெறவுள்ளதையடுத்து, மா அரங்குகள், அரசுத்துறை அரங்குகள், பொழுதுபோக்கு அம்சங்கள், விழா அரங்கம் அமைக்கப்படவுள்ள இடம், மாங்கனி கண்காட்சிக்கு பொதுமக்கள் உள்ளே செல்லும் பாதை வெளியே செல்லும் போக்குவரத்து பாதைகள் அமையவுள்ள இடங்களை மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.ஆர்.ராஜேஸ்வரி அவர்கள் இன்று (18.05.2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் வருவாய் கோட்டாட்சியர் திரு.பாபு, இணை இயக்குநர் (தோட்டக்கலைத்துறை) திரு.பூபதி, மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) திரு.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நேர்முக உதவியாளர் திரு.வெங்கடேசன், மற்றும் வருவாய்த்துறை, நகராட்சிதுறை அலுவலர்கள் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!