கிருஷ்ணகிரி மாவட்டம் ஜூனூர் கிராமத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆரம்ப காலத்து கிளைக் கழகச் செயலாளர் வெங்கடாசலம் அவர்களுடைய பேரன் கீர்த்தி வர்மா அவர்களுக்கு இரண்டு கைகளும் இல்லை. அவர்களுடைய தாயின் அரவணைப்பில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 437 மதிப்பெண்கள் பெற்று உள்ளார். அவர்களுடைய செயலை போற்றி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய துணை பொதுச் செயலாளர் கே.பி. முனுசாமி அவர்களும் மாவட்டக் கழகச் செயலாளர் கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் கே. அசோக்குமார் அவர்களும் மாணவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். மாணவனுக்கு நிதி உதவி அளித்து மேற்கொண்டு படிக்கும் படிப்பிற்கு உதவுவதாக கூறினார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கழகச் செயலாளர்கள் பகுதி கழகப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.