தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்லாட்சியில் ரூ.2 கோடியே 21 லட்சம் மதிப்பீட்டில் கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம், பாலேகுளி – சந்தூர் கால்வாயிலுள்ள மண்கரை தொட்டிப்பாலத்தை உறுதிப்படுத்துதல் மற்றும் குழாய் பதித்து தண்ணீர் கொண்டு செல்லும் பணிக்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர், பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான தே.மதியழகன் MLA அவர்கள் பூமிபூஜை செய்து பணியினை துவக்கி வைத்தார். உடன் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்.