அஇஅதிமுக
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் கே.அசோக்குமார் MLA Ex.MP
அவர்களின் அறிக்கை
தமிழகத்தின் விடிவெள்ளியாக தோன்றி எதிரிகளின் சிம்மசொப்பனமாக
வாழ்ந்து தமிழ்மக்களின் எதிர்காலத்திற்கு வழிவகுத்து தந்து மறைந்த முன்னாள்
முதல்வர் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமசந்திரனின் அவர்களின் 105-ஆவது
பிறந்த நாள் விழா 17.01.2022 திங்கட்கிழமையன்று. அந்தந்தப் பகுதிகளில் உள்ள
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்களின் திருவுருவச் சிலை மற்றும் படங்களுக்கு
மாலை அணிவித்து இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கி சிறப்பாக கொண்டாட
வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
அதுசமயம் கழக, இன்னாள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற
உறுப்பினர்களும்,, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், சார்பு அமைப்பு நிர்வாகிகள், கிளை
கழக பொறுப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள்,
இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள், தகவல் தொழில்நுட்ப
நிர்வாகிகள், கழக தொண்டர்கள், பொதுமக்களும் பெரும் திரளாக கலந்து
கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் கழக நிர்வாகிகள் அனைவரும் கொரோனா
தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசு அறிவித்திருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளைப்
பின்பற்றியும், சமூக இடைவெளியை கடைப்பிடித்தும், முகக் கவசம் அணிந்தும்,
இன்னபிற தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு பங்கு பெறுமாறு அன்புடன்
கேட்டுக் கொள்கிறேன்.