Home » ஊத்தங்கரை அருகே தனியார் கல்லூரி பேருந்து மற்றும் தனியார் பள்ளி பேருந்து மோதிய விபத்தில் 35க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் காயம்

ஊத்தங்கரை அருகே தனியார் கல்லூரி பேருந்து மற்றும் தனியார் பள்ளி பேருந்து மோதிய விபத்தில் 35க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் காயம்

by Babukanth V
0 comment

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த திருப்பத்தூர் அரூர் தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீர் பந்தல் பிரிவு சாலையில் தனியார் பள்ளி பேருந்து அரூரிலிருந்து குழந்தைகளை ஏற்றுக் கொண்டு வந்து கொண்டிருந்த பொழுது ஊத்தங்கரை சுற்றுவட்டார பகுதியில் இருந்து கல்லூரி மாணவர்களை ஏற்றுக்கொண்டு அரூர் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் கல்லூரி பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது இதில் சுமார் 12 பேருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளது

கல்லூரி மற்றும் பள்ளி பேருந்து மோதிய தகவல் பரவியதை அடுத்து பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் கூடியதால் பரபரப்பு காணப்பட்டது இருந்தபோதிலும் இந்த விபத்தில் கல்லுரி பேருந்து ஓட்டுனருக்கு கால்முறிவு ஏற்பட்டுள்ளது மாணவ மாணவிகள் சிறு சிறு காயங்களுடன் உயிர் தப்பினர் மேலும் ஊத்தங்கரை சுற்றுவட்டார பகுதியில் இயங்கக்கூடிய தனியார் கல்லூரி தனியார் பள்ளி ஆகிய வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதியது முதல் முறை என்பதால் பதற்றம் தொற்றி கொண்டது.
சம்பவத்தை அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஊத்தங்கரை காவல்துறையினர் அங்கிருந்து குழந்தைகளை மீட்டு உடனடியாக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் தற்பொழுது குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் பெற்றோர்கள் அதிக அளவில் குவிந்து வருவதால் பதற்றமாக காணப்படுகிறது

You may also like

Leave a Comment

error: Content is protected !!