Home » ஊத்தங்கரை அருகே திருப்பத்தூர் பாஜக பிரமுகர் கொடூரமுறையில் வெட்டி கொல்லப்பட்ட வழக்கில் மேலும் இரண்டு பேரை ஊத்தங்கரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஊத்தங்கரை அருகே திருப்பத்தூர் பாஜக பிரமுகர் கொடூரமுறையில் வெட்டி கொல்லப்பட்ட வழக்கில் மேலும் இரண்டு பேரை ஊத்தங்கரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

by Babukanth V
0 comment

ஊத்தங்கரை அருகே பாஜக பிரமுகர் கொடூரமுறையில் வெட்டி கொல்லப்பட்ட வழக்கில் ஏற்கனவே ஆறு பேர் கைது செய்யப்பட்டு உள்ள நிலையில் கொலையில் சம்பந்தப்பட்ட மேலும் இரண்டு பேரை ஊத்தங்கரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த வெப்பாலம்பட்டி தனியார் கிரஷர் கம்பெனி அருகே வியாழக்கிழமை (24.11.22) விடியற்காலை
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பாரதிய ஜனதா கட்சியின் நகர செயலாளர் கலிகண்ணன் என்பவர் முன்விரோதம் காரணமாக கொடூரமுறையில் வெட்டி கொல்லப்பட்ட சம்பவத்தில்

ஊத்தங்கரை டிஎஸ்பி அமல அட்வின் தலைமையில் 5 தனி படைகள் அமைக்கப்பட்டு கொலை நடந்த இடத்தில் கிடைத்த செல்போன் சிக்னல் மூலம் கொலையாளிகளை அடையாளம் கண்டு ஓசூர் பகுதியில் இருந்த

A1- ஹரிவிக்னேஷ் (25) த/பெ சுப்பிரமணி நெ.30/57 சேர்மேன்
ஆறுமுகனார் தெரு, கலைஞர் நகர், திருப்பத்தூர்.

A2-அருண்குமார் (25) த/பெ வீரமணி க.எண்.4-21 அம்பேத்கார் நகர்.
கருப்பனூர் அஞ்சல் திருப்பத்தூர் தாலுக்கா

A3-ஆனந்த் (22) த/பெ ரகு முனிசாமிபுரம் காலனி, குப்பம் அஞ்சல் மற்றும்
வட்டம் சித்தூர் மாவட்டம் ஆந்திரா மாநிலம்

A4.நவீன்குமார் (18) த/பெ அம்மாசப்பா ஒட்டப்பள்ளி கிராமம், குப்பம் அஞ்சல், சித்தூர் மாவட்டம். ஆந்திரா மாநிலம்

A5- மணிகண்டன் (27) த/பெ கிருஷ்ணன் தக்காளி மார்க்கெட் தப்பிக்கானபள்ளி கொட்டாலு கிராமம். குப்பம் அஞ்சல் மற்றும் வட்டம் சித்தூர் மாவட்டம் ஆந்திரா மாநிலம்

A6- அருண் வயது 23 த/பெ தங்கச்சான். தானுவேலி அவுஸ்.வெள்ளவூர் மணிமலா அஞ்சல். ஜங்கனாச்சேரி வட்டம் கோட்டையம் மாவட்டம் கேரளா மாநிலம்,

ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில்

திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த மேலும் இரண்டு நபர்களை ஊத்தங்கரை போலீசார் கைது செய்தனர்

A8-மைனு(எ) அப்துல்அலிஉசேன் (30) த/பெ நசிருதீன். CKC ரோடு
திருப்பத்தூர்

A9- சமீர் (23) த/பெ நசீர் குயில் மண்டி தெரு. பக்கிரிதக்கா அஞ்சல் திருப்பத்தூர் தாலுக்கா தற்போது அய்யா நகர். திருப்பத்தூர்

மேலும் தலை மறைவாக உள்ள கோகுல் என்பவனை பிடிக்க தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்

மேலும் கைது செய்யப்பட்ட எட்டு பேரும் ஊத்தங்கரை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பட்டு சேலம் மத்திய சிறைக்கு அனுப்பினர்.

கொலைக்கு அவர்கள் பயன்படுத்திய கை விலங்கு கத்திகள் மற்றும் ஸ்கார்பியோ கார் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!