கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல் நிலைப்பள்ளிக்கு மாணவ மாணிவியர்கள் உற்சாகத்துடன் திரும்பினர். கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் இன்று தமிழகம் முழுவதும் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டன. போச்சம்பள்ளி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல் நிலைப்பள்ளி மாணவர்கள் இன்று உற்சாகத்துடன் பள்ளிகளுக்கு திரும்பினர். மாணவர்கள் முகக்கவசம் அணிந்து பள்ளிகளுக்கு வந்தனர். பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோனை மேற்கொள்ளப்பட்டு பின்னர் பள்ளி அறைகளுக்கு அனுமதிக்கப்பட்டனர். அனைத்து மாணவர்களுக்கும் சானிடைசர் அளிக்கப்பட்டது. இன்று 70% மாணவர்கள் பள்ளிகளுக்கு வந்திருந்தனர்.