Home » தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் முப்பெரும் விழா

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் முப்பெரும் விழா

by Admin
0 comment

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆசிரியர் தினவிழா வெள்ளி விழா கண்ட ஆசிரியர்களுக்கு பாராட்டுவிழா ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டுவிழா என முப்பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது நிகழ்ச்சிக்குதமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார தலைவர் சுரேஷ்குமார் தலைமை வகித்தார் வட்டார செயலாளர் செந்தில்குமார் வரவேற்புரையாற்றினார்.மாநில பொதுக்குழு உறுப்பினர் மோகன்குமார் மாவட்ட துணைச் செயலாளர் முருகன் மாவட்ட மகளிரணி என் ஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி.தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர் மாரியப்பன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி நினைவு பரிசுகளை வழங்கினார்.மத்தூர் மாவட்ட கல்வி அலுவலர் பொறுப்பு சரவணன் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் பணி நிறைவு பெறும் அவர்களுக்கு பாராட்டு விழா மற்றும் சிறப்புரையாற்றினார் நிகழ்ச்சியில் அருள் சுந்தர்ராஜ் மேகநாதன் சுதாகர் மாதேஸ்வரி நாசர் அருள்பிரகாஷ் கோபி சிவப்பிரகாசம் ஆனந்தகுமார் குப்புசாமி நடராஜன் ராஜேந்திரன் ஆனந்தன்உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!