ஊத்தங்கரையில் தமிழ்நாடு முஸ்லீம் முனேற்ற கழகம் சார்பில் 75 வது, சுதந்திர தின விழா, 27 ஆண்டு தமுமுக துவக்க விழா, கரோனா கதாநாயகர்களுக்கு விருது வழங்கும் விழா என முப்பெரும் விழா தனியார் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு நகர தலைவர் ரசூல் பாஷா தலைமை வகித்தார். நகர செயலாளர் காதர் பாஷா, நகரத் துணைச் செயலாளர் ராதிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக ஊத்தங்கரை காவல் ஆய்வாளர் லட்சுமி கலந்துக்கொண்டு, நிகழ்ச்சியை துவக்கி வைத்து சிறப்புரையாற்றி, பரிசுகளை வழங்கினார்.கரோனா காலத்தில் இறந்தவர்களின் உடலை நல்லடக்கம் செய்த தமுமுக நிர்வாகிகளுக்கு நினைவு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.இதில் திமுக ஒன்றிய செயலாளர்கள் சாமிநாதன், எக்கூர் செல்வம், நகர செயலாளர் பாபுசிவக்குமார்,நகர அவைத்தலைவர் அமானுல்லா மற்றும் தமுமுக நிர்வாகிகள்,திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.