Home » கிருஷ்ணகிரி தூய பாத்திமா அன்னை திருத்தலத்தில், நேற்றைய இரவு கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை.. ஏராளமான மக்கள் பங்கேற்பு..

கிருஷ்ணகிரி தூய பாத்திமா அன்னை திருத்தலத்தில், நேற்றைய இரவு கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை.. ஏராளமான மக்கள் பங்கேற்பு..

by Admin
0 comment

கிருஷ்ணகிரி தூய பாத்திமா அன்னை திருத்தலத்தில், நல்லிரவு கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை.. ஏராளமான மக்கள் பங்கேற்பு..————————————–கிருஷ்ணகிரி தூய பாத்திமா அன்னை திருத்தலத்தில ஆலயத்தில், நல்லிரவு கிறிஸ்து பிறப்பு சிறப்பு பிரார்த்தனை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது..திருத்தல பங்குத்தந்தை அருட்திரு. இசையாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த சிறப்பு பிரார்த்தனையின் போது சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டு, கிறிஸ்து பிறப்பு சிறப்பு விழிபாட்டில் ஈடுபட்டனர்..திருத்தலத்தின் பொன் விழாவை முன்னிட்டு, புனரமைப்பு பணிகள் நடைபெறுவதால், தேவாலயத்தின் முன்புறம் இருக்கும் புனித அன்னால் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து, உலக நன்மைக்காகவும், உலக மாந்தர் அனைவரும் நலமுடன் வாழவும், அன்பு சமாதானத்தில் திளைத்திடவும் குருக்கள் சிறப்பு பிரார்த்தனைகளை மேற்கொண்டனர்.. பிரார்த்தனையின் போது பாடல் குழுவினரால், சிறப்பு கிறிஸ்துமஸ் கீதங்கள் இசைத்து பாடப்பட்டது…இந்த சிறப்பு பிரார்த்தனையில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புத்தாடைகளை அணிந்து கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் கலந்துக்கொண்டனர். சிறப்பு பிரார்தனையின் முடிவில் அனைவரும் தங்களுக்குள் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை ஒருவருக்கு ஒருவர் பரிமாறிக்கொண்டனர்.வழக்கம் போல திருத்தல வளாகத்தில் இயோசு பாலகனின் பிறப்பை உணர்த்தும் வகையில் குடில்கள் அமைக்கப்பட்டிருந்தது.

You may also like

Leave a Comment

error: Content is protected !!