கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் வட்டத்தில் உள்ள அனுசோனை துணை சுகதாரா நிலையத்தில் காச நோயில்லா தமிழகம் என்கிற தலைப்பில் மருத்துவ முகாம் நடைப்பெற்றது. மருத்துவ முகாமில் ஜேசிஐ பிருந்தாவன் தலைவர் மஞ்சுநாதன், மற்றும் பொடிச்சிப்பள்ளி ஊராட்சி் மன்ற தலைவர் தலைமை தங்கினார்கள். மருத்துவர் மணிகண்டன் அவர்கள் காச நோயால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதற்கு தேவையான மருத்துவ சிகிச்சை போன்றவற்றை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். கண் மருத்துவர் டேவிட் செல்லபாண்டியன், சிவபெருமாள் STS, கோவிந்தராஜ் ICTC ஆலோசாகர், சுகதாரா ஆய்வாளர்கள் செந்தில் குமார் , நவீன், பிரசில்லா VHN, RDC மருத்துவக்குழு மற்றும் ராஜு பஞ்சாயத்து செயலாளர்
உடன் இருந்தனர்.
இவ்விழாவில் டெங்கு கொசுபுழு ஒழிப்பு பணிக்காக
திரு மஞ்சுநாதன், தலைவர், JCI அவர்களால் மஸ்தூர்களுக்கு டார்ச் வழங்கப்பட்டது.
இறுதியில் டிபி இல்ல இந்தியாவிற்கான உறுதிமொழி எடுக்கப்பட்டது.
முகாமில் பொது மருத்துவம், கண் பரிசோதனை, டிபி பரிசோதனை மற்றும்
தொற்றா நோய்களுக்கான பரிசோதனை செய்யப்பட்டு மருந்துகளும் வழங்கப்பட்டது.