கிருஷ்ணகிரி நகராட்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்று வரும் 28 வது அகில இந்திய மாங்கனி காட்சியில், மாமல்லபுரத்தில் 28.7.2022 முதல் 10.8.2022 வரை நடைபெறும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகை அருகில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் வி.ஜெயசந்திர பானுரெட்டி இ.ஆ.ப. அவர்கள் இன்று (15.7.2022) புகைப்படம் எடுத்துக்கொண்டார். உடன் கிருஷ்ணகிரி நகர்மன்ற தலைவர் திருமதி.பரிதாநவாப், செய்தி மக்கள்தொடர்பு அலுவலர் திரு.சு.மோகன், மாவட்ட விளையாட்டு அலுவலர் திரு.எஸ்.உமாசங்கர், நகராட்சி பொறியாளர் திரு.சரவணன் நகரமன்ற உறுப்பினர் திரு.பாலாஜி, மற்றும் விளையாட்டுத்துறை பயிற்சியாளர்கள்
கிருஷ்ணகிரி நகராட்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்று வரும் 28-வது அகில இந்திய மாங்கனி கண்காட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறை அதிநவீன எல்.இ.டி. வாகனம் மூலம் மாமல்லபுரத்தில் 28.7.2022 முதல் 10.8.2022 வரை நடைபெறும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்த விழிப்புணர்வு குறும் படத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் வி.ஜெயசந்திர பானுரெட்டி இ.ஆ.ப. அவர்கள் இன்று (15.7.2022) துவக்கி வைத்து பார்வையிட்டார். உடன் கிருஷ்ணகிரி நகர் மன்ற தலைவர் திருமதி.பரிதாநவாப், செய்தி மக்கள்தொடர்பு அலுவலர் திரு.சு.மோகன், மாவட்ட விளையாட்டு அலுவலர் திரு.எஸ்.உமாசங்கர், நகராட்சி பொறியாளர் திரு.சரவணன், வட்டாட்சியர் திரு.நீலமேகம், தலைமையாசிரியர் திரு.மகேந்திரன், நகரமன்ற உறுப்பினர் திரு.பாலாஜி, உள்ளிட்ட பலர் உள்ளனர்