தருமபுரி கௌரி சங்கர் குழந்தைகள் நல மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு அவசரமாக ஓ நெகடிவ் ரத்தம் தேவை என தகவல் கிடைத்தது. இரவு நேரம் என்று கூட பாராமல் மை தரும்புரி அமைப்பு மற்றும் மனிதம் போற்றுவோம் மூலம் இரண்டு ஓ நெகடிவ் குருதி கொடையாளர்களை ஏற்பாடு செய்தோம். தருமபுரி செந்தில்குமார் டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் பணி செய்து வரும் திரு.ஜித்து அவர்கள் சற்றும் தாமதிக்காமல் உடனடியாக வந்து ரத்ததானம் அளித்தார். செந்தில்குமார் நிறுவனத்திற்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். அதேப்போல நல்லம்பள்ளி சவுளூர் ஊரை சேர்ந்த திரு.சாமி விக்னேஷ் அவர்கள் உடனடியாக வந்து ரத்ததானம் கொடை அளித்தார். இரவு நேரம் என்று கூட பாராமல் ஒரு குழந்தையின் உயிரை காப்பாற்றிய இரண்டு குருதி கொடையாளர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.