திண்டுக்கல் பாரத மாதா பவுண்டேஷன் சார்பாக திண்டுக்கல் பார்வதி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற இரத்ததான குடும்ப விழாவில் மை தருமபுரி அமைப்பின் இரத்ததான சேவை விழிப்புணர்வை பாராட்டி உயிர் காக்கும் உன்னதமான சேவைக்கான தங்க விருது வழங்கப்பட்டது. மை தருமபுரி அமைப்பின் மூலம் தலசீமியா குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், அறுவை சிகிச்சை செய்வோருக்கு தேவையான இரத்தத்தை முகாம் மற்றும் அவசர ரத்ததான தேவையை ஆண் கொடையாளர்கள், பெண் கொடையாளர்கள் உட்பட அனைவரையும் சேர்த்து இதுவரை 7000 யூனிட் இரத்தம் கொடை வழங்கியதை பாராட்டி விருது வழங்கினர். இந்த விருதினை மை தருமபுரி அமைப்பின் குருதி கொடையாளர்கள் அனைவருக்கும் சமர்ப்பணம் செய்து கொள்கிறோம். விருது வழங்கி பாராட்டிய பாரத மாதா பவுண்டேஷன் நிறுவனர் ஆனந்த் குமார் அவர்களிடம் மை தருமபுரி அமைப்பின் நிறுவனர் சதீஸ் குமார் ராஜா, தமிழ்செல்வன், அருணாசலம், விஜயகாந்த், அருள்மணி ஆகியோர் விருதை பெற்றுக் கொண்டனர். இரத்ததானம் அளிப்போம் பிறர் உயிரைக் காப்போம்.