பாரதிய ஜனதா கட்சி முன்னாள் கோட்டை பொறுப்பாளர் ரங்கநாத் அவர்களுக்கு பிறந்தநாள் விழா.கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை முன்னாள் கோட்டை பொறுப்பாளர் ரங்கநாத் அவர்களுக்கு பிறந்தநாள் விழா கெலமங்கலம் பட்டாளம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இந்து தர்மத்திற்காக பள்ளியில் படிக்கும் போதே தேன்கனிக்கோட்டையில் 1990வது வருடம் நடைபெற்ற ஸ்ரீராம ஜோதி ஊர்வலத்தில் ஏற்பட்ட கலவரத்தில் காவல்துறையிடம் அடிவாங்கி, என்னோடு சேலம் மத்திய சிறையில் இருந்து தொடர்ந்து இந்து தர்மத்திற்காக பணியாற்றி வரும் இந்துவீரர் தேன்கனிக்கோட்டை சேர்ந்த ரங்கநாத் அவர்களுக்கு பிறந்தநாளை முன்னிட்டு பொன்னாடை போர்த்தி பூமாலை அணிவித்து மரியாதை செய்தனர். இந்த பிறந்தநாளில் வளமுடனும், நலமுடனும் நீடூழி வாழ ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர்கள் பாரதிய ஜனதா கட்சி கெலமங்கலம் மேற்கு ஒன்றிய இளைஞர்அணி தலைவர் கிருஷ்ணன், மாவட்ட செயலாளர் குருமூர்த்தி, விவசாய அணி மாவட்ட செயலாளர் ராஜா, அஜந்தா டைலர் கிருஷ்ணப்பா, சென்னீரப்பா, நாகபூஷணம், சந்திரசேகர், சிவப்பா, மற்றும் ஏராளமான பாரதியார் ஜனதா கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.