தருமபுரி முத்தம்பட்டி ஆஞ்சநேயர் கோவில் வரும் வாகனங்களுக்கு நிறுத்தம் கட்டணம் வசூலிக்கப்படுவதால் பக்தர்கள் அதிர்ச்சி. இருசக்கர வாகனத்திற்கு இருபது ரூபாய், நான்கு சக்கர வாகனங்களுக்கு ஐம்பது ரூபாய், கனரக வாகனங்களுக்கு நூறு ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. முத்தம்பட்டி ஆஞ்சநேயர் கோவில் வனப்பகுதியில் அமைந்துள்ளது, பல மாநிலங்களில் இருந்து முக்கிய நாட்களில் ஆஞ்சநேயரை தரிசிக்க பல்லாயிர கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தருமபுரி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் நிறுத்த கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுகிறது.