கம்பைநல்லூர் அருகே “உதவும் கரங்கள்” அமைப்பின் மூலம் ஆதரவற்றோருக்கு உணவுவழங்கும்சமூக ஆர்வலர்தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அடுத்து ஒடசல்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் இரா.விஜய் டேவிட் இவர் மூன்று ஆண்டுகளாக ஆதரவற்றோருக்கு உணவு ,தண்ணீர் பாட்டில் ,உடைபோன்றவற்றை வழங்கி வருகிறார்சமூக ஊடகங்களில் தன்னை பற்றி தெரியப்படுத்தாத இவர் சேவையை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர் தன்னுடைய வீட்டில் தன் மனைவி தன் மகனுடன் சேர்ந்து உணவு சமைத்து இவர்களின் இருவரும் உதவியுடன் இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்றுஊர் ஊராகச் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கி வருகிறார் தருமபுரி, பென்னாகரம் காரிமங்கலம் ,கம்பைநல்லூர்,மொரப்பூர், அரூர் ,ஆகிய ஊர்களுக்கு சென்றுஆதரவற்றோருக்கு உணவு வழங்கும் இவர்ஆதரவற்றோரை பார்த்தால் உடனே 9787763115இந்த நம்பரை அழைக்கவும் அங்கு வந்து உணவை தந்து விடுவேன் என்றும் மகிழ்ச்சியுடன் சொல்கிறார்