Home » மாவட்ட அரசிதழ் பதிவுப்பெற்ற அலுவலர்களுக்கான ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருதீபக் ஜேக்கப் இ.ஆ.ப அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது.

மாவட்ட அரசிதழ் பதிவுப்பெற்ற அலுவலர்களுக்கான ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருதீபக் ஜேக்கப் இ.ஆ.ப அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது.

by Poovizhi R
0 comment

மாவட்ட அரசிதழ் பதிவுப்பெற்ற அலுவலர்களுக்கான ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருதீபக் ஜேக்கப் இ.ஆ.ப அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட அரசிதழ் பதிவுப்பெற்ற அலுவலர்களுக்கான ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு-தீபக் ஜேக்கப் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (21.04.2023) நடைபெற்றது..மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தீபக் ஜேக்கப் இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கிருஷ்ணகிரி நகராட்சி, மாவட்ட கருவூலம், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, முன்னாள் படைவீரர் நலத்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, வருவாய்த்துறை, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட துறைகளில் நிலுவையில் உள்ள பணிகள் குறித்து இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவற்றில் வேளாண்மை மற்றும் உழவர் நலந்துறை சார்பாக, தேன்கனிக்கோட்டை வட்டம், ராயக்கோட்டையில் துணை வேளாண்மை விரிவாக்க மையம் ஓடையாண்டஅள்ளி கிராமத்தில் அமைப்பதற்கு நில மாறுதல் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வேளாண்மை பொறியியல் துறை சார்பாக சூளகிரி வட்டத்தில், சுமார் ரூ.2 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள வேளாண் விரிவாக்க மைய அலுவலக வளாக பகுதியில் மழைநீர் மற்றும் கழிவுநீர் தேங்கி உள்ளதால், அவற்றை அகற்ற ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை மூலம் கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணிக்கு கருத்துரு தயார் செய்யப்பட்டு வருகிறது.வருவாய் துறை சார்பாக, அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள் ஆகியவற்றின் பொது கட்டிட உரிமங்கள் உரிய காலத்திற்குள் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்து புதுப்பித்து கொள்ள வேண்டும். மேலும், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நோயாளிகள், பார்வையாளர்கள் ஆகியோரின் இருசக்கர வாகனம் நிறுத்துவதற்கு மருத்துவமனைக்கு வெளியே கட்டணம் செலுத்தி வாகனம் நிறுத்தம் அமைத்திடவும், கல்லூரி வளாகத்தில் செயல்பட்டு வரும் புறக்காவல் நிலையத்திற்கு உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்களை பணியமர்த்துதல் குறித்தும், கல்லூரியில் பயிலும் மருத்துவ மாணவ, மாணவிகள் மற்றும் அலுவலக பயன்பாட்டிற்கு அஞ்சல் நிலைய கிளை துவக்குதல் உள்ளிட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.மேலும், பல்வேறு துறைகள் சார்பாக நடைபெற்று வரும் திட்டப் பணிகள் விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்க துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தீபக் ஜேக்கப் இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.செ.ராஜேஸ்வரி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி.வந்தனா கார்க் இ.ஆ.ப., மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (பொது) திரு.கோ.வேடியப்பன், ஓசூர் மாநகராட்சி ஆணையர் திருமதி.த.சினேகா இ.ஆ.ப, ஓசூர் சார் ஆட்சியர் திருமதி.ஆர்.சரணியா இ.ஆ.ப., மாவட்ட வன அலுவலர் செல்வி.கார்த்திகேயனி இ.வ.ப., கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் திரு.பாபு மற்றும் அனைத்து துறை மாவட்ட முதன்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!