ஊத்தங்கரையில் சிபிஎம் கண்டன ஆர்ப்பாட்டம்அனுசுயாவுக்கு அரசு வேலை வழங்க கோரிக்கைகிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த அருணகிரி கிராமத்தில் நடைபெற்ற ஆணவ படுகொலையை கண்டித்து சிபிஎம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ஊத்தங்கரை நான்கு முனை சந்திப்பு அண்ணா சிலை அருகில் நடைபெற்றது. செயலாளர் மகாலிங்கம் தலைமை தாங்கினார். சிங்காரப்பேட்டை சபாபதி மாவட்ட செயற்குழு கோவிந்தசாமி அஞ்சலாமேரி இளவரசன் எத்திராஜ் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். ஆணவ படுகொலையில் பாதிக்கப்பட்ட பெண் அனுசுயாவிற்கு அரசு வேலை வாய்ப்பும் 50 லட்சம் நிவாரணமும் வழங்க வேண்டும் ஆணவ படுகொலைகளை தடுத்திடும் வகையில் சிறப்பு சட்டம் வலியுறுத்தப்பட்டது.