கெலமங்கலத்தில் ரமலான் பண்டிகை மிக சிறப்பாக நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டை வட்டம் கெலமங்கலத்தில் புனித ரமலான் நோன்பு பண்டிகையை முன்னிட்டு,கெலமங்கலத்தில் ஜாமியா மசூதியிலிருந்து முஸ்லிம்கள் ஊர்வலமாக சென்று தொழுகையில் ஈடுபட்டு பின்பு நோன்பு முடித்தனர். ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு உதவிகள் செய்தனர். ரமலான் நோன்பு மிகச் சிறப்பாக இந்த பகுதியில் கொண்டாடினார்கள்.