கெரிகேப்பள்ளி தொடக்கப்பள்ளி ஆண்டுவிழா- மாணவர் திறனறித் திருவிழாவாக வெகு சிறப்பாக நடைபெற்றது. உலக புத்தக தினத்தை முன்னிட்டு வருகை தந்திருந்த அனைவருக்கும் நினைவுப் பரிசாக புத்தகங்களை வழங்கிவாசிப்பு இயக்கம் துவங்கப்பட்டது மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டதுஎண்ணும் எழுத்தும் கொண்டாட்டம் நிகழ்த்தப்பட்டது.சிலம்பம் வீரவிளையாட்டுக் கலையை மாணவர்கள் சிறப்பாக செய்து காட்டினர்.விளையாட்டுப் போட்டிகள் அபாகஸ் பயிற்சியில் திறன் மிகுந்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.விழா சிறக்க ஒத்துழைப்பு வழங்கிய பெற்றோர்களுக்கு நினைவுப்பரிசுகள் வழங்கி சிறப்பு செய்யப்பட்டது. மாணவர் திறனறித் திருவிழா கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் நினைவுப்பரிசுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊரின் முக்கிய பிரமுகர்கள், பள்ளி மேலாண்மைக் குழுவினர், பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள், ஆசிரியப் பெருமக்கள், இல்லம் தேடிக்கல்வி தன்னார்வளர்கள், தற்காலிக ஆசிரியர்கள், அறம் விதை அறக்கட்டளை, தமிழ்நாடு அறிவியல் இயக்கம், பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கம், சமூக சேவைக்குழு, அதியமான் ரூரல் டெவலப்மென்ட் நண்பர்கள், IVDP மற்றும் ரீட் அமைப்பு மகளிர் குழுக்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.