கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், கிருஷ்ணகிரி இராயக்கோட்டை மேம்பாலம், ஆவின் மேம்பாலம் பகுதிகளை அழகுபடுத்துவதற்காக ஒசூர் நெரோலக் பெயின்ட் நிறுவனம் சார்பாக சமூக பொறுப்பு நிதியின் கீழ் ரூ.6 இலட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் 5000 லிட்டர் பெயின்ட்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தீபக் ஜேக்கப் இ.ஆ.ப., அவர்களிடம், பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.தே.மதியழகன் அவர்கள் முன்னிலையில், நெரோலக் நிறுவன மனிதவள மேம்பாட்டு துணை தலைவர் திரு.சுதீர் பிரதாப் ரானே அவர்கள் (10.05.2023) அன்று வழங்கினார். உடன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.கோ.வேடியப்பன், நெரோலக் நிறுவன பிரதிநிதிகள் திரு.தமிழ்வாணன், திரு.பாபு, திரு.நவீன்குமார், மாவட்ட அறங்காவலர் குழுத்தலைவர் திரு.ரஜினி செல்வம் ஆகியோர் உள்ளனர்.