போச்சம்பள்ளி அருகே மாமனாரின் பாலியல் தொல்லையை தடுக்காத கணவர் – உரிமைக்காக தனது 4 வயது பெண் குழந்தையுடன் வீட்டின் முன்பு தர்ணாவில் ஈடுபட்டு வரும் பெண் கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த ஜிங்கல்கதிரம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் விக்னேஸ்வரி (28). இவரது கணவர் திருப்பதி விவசாயம் செய்து வருகிறார். கடந்த சில மாதங்களாக விக்னேஸ்வரியின் மாமனார் பெருமாள் பாலியல் ரீதியாத பல தொந்தரவு அளித்து வருவதாகவும், இதனை கணவரிடம் கூறியபோது, கண்டுகொள்ளாமல் இருந்ததால் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக நேற்று மாலை வீட்டை விட்டு வெளியேற்றி வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளனர். இதுகுறித்து போச்சம்பள்ளி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும், ஊர் முக்கியஸ்தர்களிடம் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால், வீட்டின் முன்பு தனது 4 வயது பெண் குழந்தை நிதர்ஷனாவுடன் தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார். நேற்று மாலை 3 மணியிலிருந்து தொடர்ந்து தற்போது வரை பூட்டிய வீட்டின் முன்பு தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார். மாமனார், மாமியார் மற்றும் கணவர் மூவரும் வீட்டை பூட்டிவிட்டு அவர்களது நிலத்தல் உள்ள கொட்டகையில் குடியிருந்து வரும் நிலையில், தனது உரிமைக்காக பெண் ஒருவர் தனது பெண் குழந்தைகளுடன் போராடி வருவது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.