Home » போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில் வாட்டி வதைக்கும் வெப்பம் – ஆனந்த குளியலிட்டு வெப்பத்தை தணிக்கும் பள்ளி மாணவர்கள்

போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில் வாட்டி வதைக்கும் வெப்பம் – ஆனந்த குளியலிட்டு வெப்பத்தை தணிக்கும் பள்ளி மாணவர்கள்

by Poovizhi R
0 comment

போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில் வாட்டி வதைக்கும் வெப்பம் – ஆனந்த குளியலிட்டு வெப்பத்தை தணிக்கும் பள்ளி மாணவர்கள்கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 5 நாட்களாக இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பம் வீசி வருகிறது. காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்ந்து வெப்பம் நிலவி வருகிறது. பகல் நேரங்களில் சாலைகளில் பொது மக்களின் நடமாட்டம் வெகுவாக குறைந்து காணப்படுகிறது. வெப்பம் காரணமாக பெரும்பாலான பொது மக்கள் தங்களது வீடுகளிலேயே முடிங்கியுள்ளனர். பள்ளி விடுமுறையில் இருக்கும் பள்ளி மாணவர்கள் சாதாரனமாக பகல் முழுவதும் விளையாட்டிக்கொண்டிருப்பது வழக்கம். தற்போது நிலவி வரும் வெப்பம் காரணமாக விளையாட்டை நிறுத்தாத பள்ளி மாணவர்கள், வெப்பத்தை போக்கும் வகையில் உள்ள விளையாட்டான நீச்சல் விளையாட்டில் பெரும்பாலும் ஈடுபட்டு வருகின்றனர். கிராமங்களில் உள்ள பெரும்பாலா பள்ளி மாணவர்கள் சிறுவயதிலேயே நீச்சல் கற்றுகொள்வது வழக்கம். அதனடிப்படையில் பகல் 2 மணிக்கு விவசாய கிணற்றுக்கு செல்லும் மாணவர்கள் 4 மணியளவிலேயே வீடு திரும்புகின்றனர். 2 முதல் 3 மணி நேரம் வரை நீச்சல் விளையாட்டில் ஈடுபடுகின்றனர். இதனால் வெப்பம் தணிந்து உடல் குளிர்ச்சியாவதுடன், அவர்களது விளையாட்டும் தொடர்ந்து வருகிறது.

You may also like

Leave a Comment

error: Content is protected !!