ஜல்லிக்கட்டு சட்ட திருத்தம் செல்லும் உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்துகிருஷ்ணகிரியில் ஜல்லிகட்டு பேரவை சார்பில் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கி உற்சாகம் .தமிழக அரசு சட்டப்பேரவையில் ஜல்லிக்கட்டு திருத்த மசோதா சட்டம் நிறைவேற்றியது இதனை எதிர்த்து சில அமைப்புகள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம்தீர்ப்பு வழங்கியது அதில் தமிழக அரசு கொண்டுவந்துள்ள ஜல்லிக்கட்டு திருத்த சட்ட மசோதா செல்லும் என தீர்ப்பளித்தது இதனால் தமிழக மக்கள் ஜல்லிக்கட்டு வீரர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.இதனை அன்று உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று கிருஷ்ணகிரி ரவுன்டான அருகில் தமிழ் நடு ஜல்லிகட்டு பேரவையின் தலைவர் ஹரிஹரன் தலைமையில் 50-க்கு மேற்பட்ட ஐல்லிகட்டு ஆர்வாளர்கள் பட்டாசுகளை வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி உற்சாகமாக கொண்டாடினர்.தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை தடை இன்றி நடத்த தமிழக அரசு கொண்டு வந்த சட்ட மசோதா அதனை உறுதி செய்த உச்ச நீதிமன்றம் தீர்ப்பு ஆகியவற்றை வரவேற்று முழக்கங்களை எழுப்பி கொண்டாடி மகிழ்ந்தனர்கள்.