கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் ஜீன் 3 வது வாரத்தில் 29-வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி விழா நடைபெறவுள்ளதையடுத்து மா அரங்குகள், அரசுத்துறை அரங்குகள், விழா அரங்கம் அமைக்கப்படவுள்ள இடம் மற்றும் மாங்கனி கண்காட்சிக்கு பொதுமக்கள் உள்ளே செல்லும் பாதை, வெளியே செல்லும் போக்குவரத்து பாதைகள் அமையவுள்ள இடங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கே.எம்.சரயு இ.ஆ.ப. அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் வருவாய் கோட்டாட்சியர் திரு.பாபு, மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) திரு.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி.கே.பி.மகேஸ்வரி, துணை காவல் கண்காணிப்பாளர் திருமதி.தமிழரசி, கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையாளர் திருமதி.வேடியம்மாள், மக்கள் தொடர்பு அலுவலர் மோகன், உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்.