தளி சட்டமன்றத் தொகுதி ஆச்சுபாளம் ஊராட்சி பசவனதொட்டி கிராமத்தில் கனமழையின் காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 3 வயது குழந்தை (ரக்ஷித்) உயிரிழந்த தகவலறிந்த தளி சட்டமன்ற உறுப்பினர் T.இராமச்சந்திரன் B.Sc.,LLB.,MLA அவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று குழந்தையின் பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறி ரூ. 10000 நிதியுதவி வழங்கினார் மேலும் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று அரசின் உரிய நிவாரணம் பெற்று தரப்படும் எனவும் மேலும் இடிந்து விழுந்த வீட்டிற்கு அரசின் தொகுப்பு வீடு கட்டி தர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.