அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட கழக செயலாளரும்,முன்னாள்அமைச்சருமான P.பாலகிருஷ்ண ரெட்டி அவர்களின் அறிக்கைஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கிருஷ்ணகிரி மேற்குமாவட்ட கழகத்தின் சார்பில் தமிழகத்தில் தொடரும் ஊழல் முறைகேடுகள், கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபானங்களால் இறப்பு, கொலை, கொள்ளை, வழிப்பறி, போதைப்பொருட்கள் புழக்கம் உள்ளிட்ட சட்டம்- ஒழுங்கு சீர்கேடுகளைக் கட்டுப்படுத்தத் தவறியவிடியா திமுக அரசைக் கண்டித்தும், இவைகளுக்கு முழு பொறுப்பேற்று முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் உடனடியாக பதவி விலக வலியுறுத்தியும் அனைத்திந்திய அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.பாலகிருஷ்ண ரெட்டி அவர்களின் தலைமையில்,29.05.2023 திங்கட்கிழமை காலை 10.00 மணியளவில்,ஓசூர் மாநகராட்சி, ராயக்கோட்டை சாலை மின்வாரிய அலுவலகம் எதிரில் , அனைத்து ஒன்றிய, நகர பேரூர் கழக செயலாளர்கள்முன்னிலையில், கழக துணை பொதுசெயலாளர் முன்னாள் அமைச்சர் திரு கே.பி.முனுசாமி அவர்களும் மற்றும் மாநிலங்களவை எம்பியும் கழக கொள்கை பரப்பு செயலாளருமான திரு மு.தம்பிதுரை ஆகியோர், ஆர்பாட்டத்தை துவக்கி வைத்து கண்டனபேரூரையாற்ற உள்ளனர்.அதுசமயம் கழக இந்நாள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்,மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர், கழக செயலாளர்கள், பொதுக்குழுஉறுப்பினர்கள், மற்றும் சார்பமைப்பு நிர்வாகிகள், கிளை கழக பொறுப்பாளர்கள்உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், கழக தொண்டர்கள் மற்றும்பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்…