பாலக்கோடு மேற்கு ஒன்றிய திமுக சார்பில் முதல்வரின் 70 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு 100 க்கும் மேற்பட்ட ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்.தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் வழங்கினார்பாலக்கோடு ஏப்ரல் 06 ; பாலக்கோடு மேற்கு ஒன்றிய திமுக சார்பில் முதல்வரின் 70 ஆவது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக பஞ்சப்பள்ளி, கும்மனூர், சூடனூர் உள்ளிட்ட ஊராட்சிகளில் சுமார் 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்களில் பாலக்கோடு மேற்கு ஒன்றிய செயலாளர் பஞ்சப்பள்ளி அன்பழகன் தலைமையில் தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் அவர்கள் கொடியை ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கி மேலும் நாகனூர் கிராமத்தில் சுமார் 100 க்கும் மேற்பட்ட ஏழை எளிய பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந் நிகழ்ச்சியில் தொகுதி பார்வையாளர் தமிழ்மாறன், மாவட்ட துணைச் செயலாளர் இராஜகுமாரி, பொருளாளர் முருகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம், மத்திய ஒன்றிய செயலாளர் முனியப்பன், மாரண்டஅள்ளி பேரூராட்சி தலைவர் வெங்கடேசன் ,ஒன்றிய நிர்வாகிகள் முருகன், அண்ணாமலை,துரை,முத்துராஜ், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ரவி,துணை அமைப்பாளர் குமார், தொண்டரணி குமார், கவுன்சிலர் ராஜா,ஊராட்சி மன்ற தலைவர்கள் குட்டி,ஆனந்தன், முருகன், ஐ.டி.விங் ஆனந்தன்,ஆதம்,சண்முகம், மற்றும் பாம்பே சக்தி,புதூர் பழனிச்சாமி,விக்கி,ஜோதிவேல்,தளபதி, கண்ணன் ,சந்துரு, உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.நாகனுர் கிராமத்தில் 100 க்கும் மேற்பட்டோருக்கு மாவட்ட கழக செயலாளர் பழனியப்பன் அவர்கள் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்