Home » பர்கூர் பேரூராட்சியில் நீர்மோர் பந்தலை தே.மதியழகன் எம்எல்ஏ திறந்து வைத்தார்

பர்கூர் பேரூராட்சியில் நீர்மோர் பந்தலை தே.மதியழகன் எம்எல்ஏ திறந்து வைத்தார்

by Poovizhi R
0 comment

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் பர்கூர் பேரூராட்சியில் கோடை வெப்பத்தை தணிக்கும் பொருட்டு திமுக சார்பில் நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டது. மாவட்ட கழக செயலாளரும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான தே.மதியழகன் எம்எல்ஏ தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு தர்பூசனி, நீர்மோர் வழங்கினார்.இந் நிகழ்ச்சியில் மாவட்ட அவை தலைவர் டி.ஏ.நாகராஜ், மாவட்ட துணை செயலாளர் பி.கே.கோவிந்தசாமி, மாவட்ட பொருளாளர் கதிரவன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெ.கே.கிருபாகரன், பொதுக்குழு உறுப்பினர்கள் பாலன், அஸ்லம், கிருஷ்ணகிரி நகர செயலாளர் எஸ்.கே.நவாப், பர்கூர் பேரூர் செயலாளர் வெங்கடப்பன், பேரூராட்சி தலைவர் சந்தோஷ்குமார், ஒன்றிய செயலாளர்கள் வி.ஜி.ராஜேந்திரன், அறிஞர், கவுன்சிலர் மகேந்திரன், துணை செயலாளர் மகேந்திரன், மாவட்ட பொறியாளர் அணி டி.சி.ஆர்.தினேஷ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்

You may also like

Leave a Comment

error: Content is protected !!