Home » ரூ.35 கோடியே 64 இலட்சத்து 66 ஆயிரம் மதிப்பில் தடுப்பணை மற்றும் நீர் செறிவூட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.

ரூ.35 கோடியே 64 இலட்சத்து 66 ஆயிரம் மதிப்பில் தடுப்பணை மற்றும் நீர் செறிவூட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.

by Admin
0 comment

ரூ.35 கோடியே 64 இலட்சத்து 66 ஆயிரம் மதிப்பில் வேப்பனஹள்ளி, பர்கூர் மற்றும் தளி ஊராட்சி ஒன்றியங்களில் தொடர்ந்து 5 ஆண்டுகளில் செயல்படுத்தும் விதமாக இயற்கை வள மேம்பாட்டு பணிகளான கசிவு நீர் குட்டை, பண்ணை குட்டை, தடுப்பணை மற்றும் நீர் செறிவூட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.இத்திட்டத்தின் மூலம் 3 ஊராட்சி ஒன்றியங்களில் 16 ஆயிரத்து 203 ஹெக்டர் விவசாய நிலங்கள் பயன்பெறவுள்ளன.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி ஊராட்சி ஒன்றியம், பொம்மரசனப்பள்ளி, அரியனப்பள்ளி, நாச்சிகுப்பம் ஊராட்சியில் வேளாண்மை மற்றும் நீர்வடிப்பகுதி திட்டத்தின் மூலம் மழைநீர் சேமிப்பு கசிவு நீர் குட்டைகள், கதிர்அடிக்கும் களம் மற்றும் பைப்லைனுடன் கூடிய குடிநீர் தொட்டி அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.வி.ஜெயசந்திர பானுரெட்டி இ.ஆ.ப. அவர்கள் இன்று (13.7.2022) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

வேப்பனஹள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் நீர் செறிவூட்டும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.வி.ஜெயசந்திர பானுரெட்டி இ.ஆ.ப. அவர்கள் இன்று (13.7.2022) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தகவல்.

மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வேளாண் உற்பத்தி பெருக்கவும், நிலத்தடி நீர் செறிவூட்டம் பணிகளுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள் அதனப்படையில், தமிழ்நாடு அரசு மற்றும் பிரதான் மந்திரி விவசாய நீர் பாசன திட்டத்தின் கீழ் நீர் வடி பகுதி மேம்பாட்டு திட்டம் 2.0 நமது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வேப்பனஹள்ளி, பர்கூர் மற்றும் தளி ஆகிய மூன்று வட்டாரங்களில் இயற்கை வள ஆதார மேம்பாட்டு பணிகள், பண்ணை உற்பத்தி பணிகள் மற்றும் வாழ்வாதார மேம்பாட்டு பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் மழைநீர் சேமிப்பு கசிவு நீர் குட்டைகள், தடுப்பணைகள், பண்ணைகுட்டைகள், நீர் அமிழ்வு குட்டைகள், கம்பி வலை தடுப்பணைகள், நீர் உறிஞ்சு குழிகள், வறண்ட கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளுக்கு நீர் செறிவூட்டும் பணிகள், பழசெடிகள் நடவு மற்றும் சமூக காடுகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் விவசாய குழுக்கள், மகளிர் குழுக்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு சுயதொழில் மேற்கொள்ள சூழல் நிதி வழங்கப்படுகிறது.

வேப்பனஹள்ளி ஒன்றியத்திற்குட்பட்ட நாடுவனப்பள்ளி, வேப்பனஹள்ளி,நாச்சிகுப்பம், தம்மாண்ரப்பள்ளி, சிகரமாகனப்பள்ளி, மணவாரனப்பள்ளி, சென்னசந்திரம்ஆகிய ஊராட்சிகளில் தொடர்ந்து 5 ஆண்டு திட்ட பணியாக 17 நீர் வடி பகுதி திட்டம் துவக்கப்பட்டுள்ளது.

அவற்றில் 2021- 2022 முதல் ஆண்டு நுழைவு கட்டபணியாக ரூ. 25 இலட்சம் மதிப்பிட்டில் 9 கசிவு நீர் குட்டைகள் அமைக்கும் பணிகளும், ரூ.25.40 இலட்சம் மதிப்பீட்டில் 10 கதிர் அடிக்கும் களம், மற்றும் 7 – குடிநீர் பைப்லைனுடன் கூடிய சிறு தண்ணீர் தொட்டி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

பர்கூர் ஒன்றியத்தில் கொட்டப்பநாயனப்பள்ளி, குள்ளம்பட்டி, பட்லப்பள்ளி, பெருகோப்பனப்பள்ளி, தொகரப்பள்ளி, கண்ணடஹள்ளி, ஜெகதேவி, வெப்பாலம்பட்டி, ஐ.கொத்தப்பள்ளி, ஆகிய ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு 12 நீர் வடிபகுதி திட்டங்கள் துவக்கப்பட்டுள்ளது. 2021- 2022 முதல் ஆண்டு நுழைவு கட்டபணியாக ரூ.24 இலட்சம் மதிப்பில் 8 கசிவு நீர் குட்டைகள் அமைக்கும் பணிகளும், ரூ.24.29 இலட்சம் மதிப்பில் 12 கதிர் அடிக்கும் களம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

தளி ஒன்றியத்தில் ஜவளகிரி, மாடக்கல், தக்கட்டி, உரிகம் மற்றும் கோட்டையூர் ஆகிய ஊராட்சிகளில் 23 நீர் வடிப்பகுதி திட்ட பணிகள் செயல்படுத்தப்படவுள்ளது. 2021 2022 முதல் ஆண்டு நுழைவு கட்டபணியாக ரூ. 24 இலட்சம் மதிப்பில் 8 கசிவு நீர் குட்டைகள் அமைக்கும் பணிகளும், ரூ. 21.59 இலட்சம் மதிப்பில் 23 குடிநீர் பைப்லைனுடன் கூடிய தண்ணீர் தொட்டி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இத்திட்டத்தின் மூலம் 3 ஊராட்சி ஒன்றியங்களில் 16 ஆயிரத்து 203 ஹெக்டர் விவசாய நிலங்கள் பயன்பெறுகின்றன. மேலும் பண்ணை உற்பத்தி பணிதிட்டத்தின் கீழ் நடப்பு ஆண்டில் 105 ஹெக்டர் தனியார் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களில் பழசெடிகள் மற்றும் சமூக காடுகள் வளர்ப்பு பணிகள் செயல்படுத்தப்படவுள்ளது. விவசாயிகள் மற்றும் மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு மண்புழு வளர்ப்பு, காளான் வளர்ப்பு, கோழி மற்றும் கால்நடைகள் வளர்ப்பு, சிறுதொழில்களான சோப்பு, ஊதுவத்தி, அப்பளம் மற்றும் சேம்பு தயாரிக்கும் பணிகளுக்கு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது.

இன்று வேப்பனஹள்ளி ஊராட்சி ஒன்றியம் பொம்மரசனப்பள்ளி நீர்வடிப்பகுதியில் ரூ. 5 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் கசிவு நீர் குட்டை, ரூ. 3 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் கசிவு நீர் குட்டை பணிகளும் அரியனப்பள்ளி நீர்வடிப்பகுதியில் ரூ. 2.89 இலட்த்தில் கதிர் அடிக்கும் களம் பணிகளும், கடவரப்பள்ளி நீர் வடிப்பகுதியில் ரூ. 69 ஆயிரம் மதிப்பீட்டில் பைப் லைன் அமைத்து தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ள பணிகள் நேரில் ஆய்வு செய்யப்பட்டது. பணிகளை விரைந்து முடித்து மழை நீரை சேமிக்க வழிவகை

செய்யவேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் வி.ஜெயசந்திர பானுரெட்டி இ.ஆ.ப. அவர்கள் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.இவ்வாய்வின்போது வேளாண்மைத் துறை துணை இயக்குநர் திரு.சிவசங்கர் சிங், வேளாண் உதவி இயக்குநர் திருமதி.கே.சரோஜா, நீர்வடிப்பகுதி அணி பொறியாளர் திரு.வி.சரவணன், நீர் வடிப்பகுதி (வேளாண்மை) திருமதி.எம்.தமிழரசி, வேப்பனஹள்ளி ஊராட்சி மன்ற தலைவர் திரு.கலீல், நாச்சிகுப்பம் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி.என். இந்திராநாகராஜ் மற்றும் நீர் வடிப்பகுதி குழு உறுப்பினர்கள், பயனாளிகள் குழு உறுப்பினர்கள், உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!